Sunday, February 21, 2010

எங்க ஊர்க்காரரும்,அமிகோவும்!

அன்னைக்கி ஒரு நாள்,சுமாரா ஒரு மாசம் முன்னாடி எங்க ஊருக்காரர் ஒருத்தர் சாக்ரமண்டோவிலிருந்து-ஏர்போர்டுக்கு பிளைட் பிடிச்சி (கலிபோர்னியா தலைநகர்)நியூயார்க் போறதுக்காக டாக்சி ஏற்பாடு பண்ணிஇருக்கார். (பேரு வேணாமே)வந்தது மெக்சிகோ நாட்டுக்காரன்.இவரும் டாக்ஸியில உட்காந்தாச்சி,அதும் கிளம்பி ஏர்போர்ட் நோக்கி செல்ல ஆரம்பித்தது.

கொஞ்ச நேரம் கழிச்சி,அந்த மெக்சிகோ டாக்சிக்காரன், நம்ம ஆளை ஒரு கேஸ் ஸ்டேஷன்(பெட்ரோல் பங்க்)கூட்டிப் போய்,கேஸ் போடணும் என்று சொல்லி,அவனும் கீழ இறங்கி-கடைக்குள்ள போய் கேஸ் போட    பணம் தா என்று கேட்க,இவரும் கீழ இறங்கி அவனோட கூட போய் பணம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் 'இறங்கி நடந்து வர 'அப்பொழுது அது நடந்தது,இவர் டாக்சியை விட்டு இறங்கினதும்-அந்த மெக்சிகோ டாக்சிக்காரன் விருட்டென்று  டாக்ஸியில ஏறி பறந்துவிட,நம்ம ஆளு,"அமிகோ-அமிகோ"என கத்த(ஸ்பானிஷ் மொழியில் அமிகோ என்றால் நண்பா என பொருள்)அவன் போயே,போய்விட்டான்.

பாவம் நம்ம ஆளுவுடைய,பாஸ்போர்ட்,கிரீன் கார்ட்,பணம்,பொருட்கள் எல்லாம் போய்விட்டன.என்ன செய்வது?

இது போன்ற தகிடு தத்ததங்கள்  நம்ம ஊர்லயும்    இருக்கு,அமெரிக்காவிலேயும் இருக்கு.எல்லாரும் விழிப்புடன் இருக்கவே இந்த செய்தி.


(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. 

அல்குர்ஆன் 2-186

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி




Tuesday, February 9, 2010

கிளைகளும்,கோத்திரங்களும்.........

அட நீ இந்த வூட்டு புள்ளயா? உன்னோட தடிச்ச உதட்ட வச்சே கண்டு புடிச்சிட்டேன்.சரியா?

அட நீ அந்த அவோ வூட்டுப் பையன்தானே,உன்னோட கண்ணை வச்சி தெரிஞ்சி போச்சு.

இப்பிடி சிலபேரோட முக சாடை,மூக்கு அளவு,முரசு,உதடு,முடி,தொந்தி,உயரம்-குள்ளம்,நடை,பேச்சு,கலர் இதையெல்லாம் வச்சி,ஒவ்வொரு குடும்பத்தையும் நாம அடையாளம் காண முடியும்.

இதெல்லாம்,இந்த வித்தியாசமெல்லாம் நாம் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளவே இறைவன் படைத்துள்ளான்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட சில குணாதியசங்கள் உண்டு.இந்த மாதிரியான சில வித்தியாசங்களை வைத்து,ஒருவர் மற்றவரை பழிக்கவோ,அல்லது இது மூலம் உயர்த்தி-தாழ்த்தி நடப்பது அறிவீனம்.

ஆனால் இப்படி மக்களில் பலர் சில குடும்பங்களில் உள்ள குணாதியசங்களை வைத்தோ,அல்லது அவர்களின் தனிப்பட்ட உடல் வாகை வைத்தோ சாடி பேசுவதைக் காண்கிறோம்.அது மிக தவறு.

உதாரணமாக,குள்ளமான ஒருவரை பார்த்து.ஜப்பான்காரன் வர்றான் பாரு என்றோ வெள்ளை நிறத்தில் ஒருவனைக் கண்டால் "வெள்ளப்பாச்ச"என்பது கருப்பாய் இருந்தால் "அடுப்புக்கரி"என்பதும் இப்படி நிறைய சொல்லலாம்.இதை நாம் உடனே கை விடவேண்டிய தீய பண்பாகும்.அல்லாஹ் இதை விரும்புவதில்லை.




இறைவன் முன் அனைவரும் சமம்.இறை அச்சம் உள்ளவர் யாரோ,அவர் ஏழையாக இருந்தாலும்,அழகற்றவராக இருந்தாலும்,கருப்பராக இருந்தாலும் அவரே மனிதர்களில் உயர்ந்தவர்,சிறந்தவர்.
இதுதான் இஸ்லாம் காட்டும் வழி.

மனிதர்களே!
உங்களை ஓர்ஆண் ஒருபெண்ணிலிருந்தே

படைத்தோம்.

நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதர்ககாக

உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்

உங்களில்[இறைவனை] அதிகம்அஞ்சுவோரே

இறைவனிடன் சிறந்தவர்.

இறைவன் அறிந்தவன்;நன்கறிபவன்.


திருக்குர்ஆன்

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

இறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்