Saturday, May 29, 2010

தவிச்சுப்போன சுல்தானின் மனசு படித்தேன்,பகிர்ந்தேன்!

சுல்தானின் மனசு துடித்தது எதற்காக ? அந்த துடிப்பு என் மனசுக்குள்ளும்.எத்தனையோ ஆயிரம் நபர்களை பார்க்கிறோம,பழகுகிறோம்.ஆனால் எத்தனை பேரிடம் இறைவனால் அங்கீகரிகப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாத்தை எடுத்து சொல்லி இருக்கிறோம்.நாம் மட்டும் சொர்க்கம் போனால் போதுமா?அவர்களை நரகத்தில் விட்டு விட்டு ...... இல்லை ....இல்லை வேணாம் வேண்டவே வேண்டாம்.இன்ஷா அல்லாஹ் நாம் பார்க்கும் மக்களிடம் சத்திய இஸ்லாத்தின்  செய்தியை எடுத்து சொல்வோம்.உலகின் ஒவ்வொரு நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இஸ்லாம் வெகு வேகமாய் பரவி வருகின்றது.(உதாரணம் சமீபத்திய நல்ல வரவு முன்னாள் பெரியார்தாசன்-இப்பொழு பேராசிரியர் அப்துல்லா)நம் பங்களிப்பு எப்போது?.இன்றே ஆரம்பிப்போம் அழைப்புபணியை இன்ஷா அல்லாஹ் .

என் எண்ணங்களை சொல்லவும்,செயல்படுத்தவும் ஞாபகமூட்டிய சகோ சுல்தான் அவர்களுக்கு என் நன்றிகள் பல.

நான் சுல்தான் என்ற பெயரில் பதிவை ஏற்படுத்தி சில இடுகைகளை இட்டிருக்கிறேன். அந்தப் பதிவிலிருந்த சில இஸ்லாமிய இடுகைகளை தனியே எடுத்து இந்த பதிவைத் தொடங்கினேன். இஸ்லாத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை நீக்குவதற்காக என்னால் இயன்ற முயற்சிதான் இப்பதிவு. தேவையுள்ளவர்கள் அவ்வப்போது வந்து படிக்கிறார்கள். யாரோ ஒரு நண்பர் இன்று லிங்க் கொடுத்ததால், இதைப் பார்வையிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்திற்கு, இந்த பதிவு பிடிக்கவில்லையென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே. என் இந்த பதிவை ஸ்பேம் என்று ரிப்போர்ட் செய்திருக்கின்றார்கள்.

அந்த நல்ல உள்ளங்களுக்கு ஏற்பட்ட வயிற்றெறிச்சலில்தான் நான் உறங்கிப் போனது தெரிந்தது. அவர்கள் வயிற்றெறிச்சலை வளர்க்க இனி அடிக்கடி இங்கேயும் எழுத முயற்சிப்பேன். டைஜின் போன்ற மாத்திரைகளை கொஞ்சம் தாராளமாக கைவசப்படுத்திக் கொள்ளுங்கள்.

என் நண்பர் ஒருவர் அவர் நண்பரோடு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே அறையில் வசித்து வந்தார். பின்னர் நம் நண்பரின் நண்பர் வாழ்வின் முன்னேற்றம் வேண்டி கனடா போய்ச் சேர்ந்தார். அங்கே போன ஓரிரு ஆண்டுகளில் அவர் இஸ்லாத்தை தம் வாழ்வியலாக ஏற்றார். சில மாதங்கள் கழித்து அவர் நம் நண்பருடன் போனில் பேசும் போது தாம் முஸ்லீமான விடயத்தையும் தெரியப் படுத்தினார்.

அப்போது நம் நண்பர், "ஏனப்பா இவ்வளவு ஆண்டுகள் என் கூட இருந்தாய். இவ்வாறு ஒரு நாட்டமுள்ளது எனக்கு தெரியவுமில்லை. நீர் சொல்லவுமில்லையே" எனக் கேட்டபோது, அவரோ, "நான் இவ்வளவு ஆண்டுகள் உன்னுடன் இருந்தும் நீ என்றாவது இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லி இருக்கிறாயா? நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம். சொல்ல வேண்டியது உனக்கு கடமையில்லையா? ஆனாலும் இறைவன் எனக்கு இப்போதுதான் நாடியிருக்கிறான் போலிருக்கிறது" என்று சொன்னாராம். அதைக் கேட்டதிலிருந்து என் நண்பர் பல நாட்கள் தவித்தது போலவே, நானும் சில நாட்கள் தவித்திருக்கிறேன்.

என்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்.

இறைவனின் நாட்டப்படி இனி தொய்வின்றி தொடத் தொடர முயற்சிப்பேன்.





thanks to

http://islamicfold.blogspot.com/

Monday, May 17, 2010

பேசித் தீர்க்கலாமே சகோதரி

 
இந்த செய்தியை தினமணியில் படித்தவுடன் மனம் துணுக்குற்றது.துக்கம் நெஞ்சை அடைத்தது.அந்த சகோதரி நம் ஊரை சேர்ந்தவர் என்பதாலோ,அந்த ஹட்சன் ஆறு பக்கத்தில் நான் வசிப்பதால் என்பதால் என்றோ இருக்கலாம்.ஆனால்  அந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது - இன்ஷா அல்லாஹ் இனி உலகின் எந்த பகுதியிலும் இது போல் நடக்கக் கூடாது என ஏக இறைவனை பிரார்த்தனை செய்தவளாக...........

உங்கள் பாத்திமா ஜொஹ்ரா 
----------------------------------------------------------------------------

கண​வர் மீது கொண்ட மன வருத்​தம் கார​ண​மாக 19 மாத பெண் குழந்​தையை நியூ​யார்க் நக​ரில் ஹட்​சன் ஆற்​றில் எறிந்​து​விட்டு தானும் அதில் குதித்து தற்​கொ​லைக்கு முயன்ற தமிழ்​நாட்​டுப் பெண் கைது செய்​யப்​பட்​டார்.​ 

அவர் மீதான குற்​றச்​சாட்​டு​கள் நிரூ​பிக்​கப்​பட்​டால் அவ​ருக்கு 25 ஆண்​டு​கள் தண்​டனை கிடைக்​கும்.​​ அமெ​ரிக்​கா​வில் கடந்த செவ்​வாய்க்​கி​ழமை இச் சம்​ப​வம் நடந்​தது.​ 

தமிழ்​நாட்​டைச் சேர்ந்த அவ​ரு​டைய பெயர் தேவி சில்​வியா.​ கண​வர் பெயர் டொமி​னிக் ஜேம்ஸ் பிரு​தி​வி​ராஜ்.​ ஆற்​றில் வீசப்​பட்ட 19 மாத பெண் குழந்​தை​யின் பெயர் ஜெஸ்​ஸிகா பிரு​தி​வி​ராஜ்.​​ அமெ​ரிக்​கா​வில் குடி​யேறி கடந்த சில ஆண்​டு​க​ளா​கி​றது.​ கண​வ​ரு​டைய வேலை கார​ண​மாக சிகாகோ,​​ கலி​போர்​னியா,​​ நியூ​யார்க் நக​ரங்​க​ளில் வசித்​தி​ருக்​கி​றார்.​ இரு​வ​ருக்​கும் இடை​யில் ஏதோ பூசல்.​ பேச்​சுத்​து​ணைக்கு கூட ஆள் இல்​லா​மல் தனி​மை​யில் சோகத்​தில் வாழ்ந்​தி​ருக்​கி​றார் தேவி சில்​வியா.​​ 

பனிக்​கட்​டி​யைப் போல ஜில்​லிட்ட ஆற்​றில் வீசி​ய​தால் குழந்​தை​யின் உடல் நீலம் பாரித்து,​மரக்​கட்​டை​யைப் போல விறைத்​தி​ருந்​தது.​ குழந்​தைக்கு வேறு ஏதும் பாதிப்பு ஏற்​பட்​டி​ருக்​குமா என்று தெரி​ய​வில்லை.​ அப்​படி ஏதும் நேரிட்​டால் தேவி சில்​வி​யா​வுக்கு தண்​டனை மேலும் அதி​க​ரிக்​கும்.​​ 

இச் சம்​ப​வம் குறித்து அவ​ரு​டைய ​ கண​வ​ரின் கருத்​தைக் கேட்க முற்​பட்​ட​போது அவர் பதில் அளிக்க வர​வே​யில்லை.​​ சில்​வியா இப்​போது மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெறு​கி​றார்.​ அவ​ருக்கு ஜாமீன் தரப்​ப​ட​வில்லை.

 நன்றி தினமணி

--------------------------------------------------------------------------------------
"(துக்கம் ஏற்பட்டால்) கன்னங்களில் அறைந்து கொள்பவன், அல்லது சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவன், அல்லது அறியாமைக் கால வழக்கப்படி புலம்புகிறவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).

நபிமொழி----------------------------------------------------------------------------------------------------------------------------------
    செல்வம் என்பது உலகப் பொருள்களின் அதிகரிப்பில் இல்லை. எனினும் செல்வம் என்பது மனத்தின் செல்வமேயாகும். போதுமென்ற மனமேயாகும் என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபிமொழி
----------------------------------------------------------------------------------------
4:128
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். 

குர்ஆன்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

Sunday, May 9, 2010

தண்ணீர் ....தண்ணீர்..........

என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், உடல் எடை ஓரளவுதான் குறையும்.

ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையில்லை, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடங்களையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி கடைசியில் வெளியேறி விடுகிறது.

இப்படி செய்வதால்தான் சிறுநீரகம் மற்றும் குடல் பிரச்சினைகள் என்று எதுவும் வராது. நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
இதுதான் பலரின் கேள்வி.

* ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவிகிதம் வரை தண்ணீர் தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது.

* பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

* ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.

* தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.

* வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை சாற்றைப் பிழிந்தோ குடிக்கலாம்.
குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது

பூமியின் மேற்பரப்பில் தண்ணீர்தான் மூன்று மடங்கு அடங்கியுள்ளது. அதே போல் மனித உடலும் முக்கால்வாசி தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது.

எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளிக்க வேண்டும்.

இதற்காகப் ஜில்'லென்று குளிர்ந்த தண்ணீர் நிரப்பிக் கொண்டு தொட்டிக்குள் உட்காருங்கள். ஒரு நிமிடம் தண்ணீருக்குள் முழு உடலும் இருக்கும் விதத்தில் மூழ்கிக் கொண்டு உடலை ஆங்காங்கே தேய்த்து விடவும்.

ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது.

-------------------------------------------------------------------
இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாடசிகள் இருக்கின்றன.13:4

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. 13:14


(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக "இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். இனனும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.18:29


(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).67:30

திருக்குர்ஆன் 
-------------------------------------------------------------------------------------
பாகம் 1, அத்தியாயம் 4, எண் 173 'ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நபி மொழி