Monday, September 26, 2011

'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் இன்று மரணம்


நம் 'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இறப்பெய்திவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
நம் சிறார்கள் கல்வி ஞானம் பெற வேண்டும் என்பதில் புலவர் பஷீர் மிகுந்த அக்கறையுடையவர்கள்.

சிறார்களுக்கு எளிதில் இஸ்லாமியப் பாடங்களை விளக்கும் வகையில் புதுமலர்கள் என்ற பெயரில் ஒவ்வொரு வகுப்புக்கும் தக்கவாறு நூல்களை எழுதியுள்ளார்கள்.

அன்னாரின் ஜனாஸா நாளை 27.09.2011 காலை 10  மணிக்கு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சாதிக்பாஷா நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: அதிரை அஹ்மது காக்கா அவர்கள் 
அவர்களின் பேச்சை கேட்க 

Saturday, September 24, 2011

சிந்தனை செய்வீர் ! சிரம் பணிவீர்,ஏக இறைவனுக்கு!!



கேப் கேனவரல் (அமெரிக்கா), செப்.24: அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக்கோள் வெள்ளிக்கிழமை அதிகாலை பூமி மீது மோதியது; ஆனால் பூமியின் எந்தப் பகுதியில் இது மோதியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.




 சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்காக யுஏஆர்எஸ் எனப்படும் செயற்கைக்கோள் நாசா நிறுவனம் 1991-ல் விண்ணுக்கு அனுப்பியது. இது 6 டன் எடையுடையது. 2005-ல் செயற்கைகோள் செயலிழந்ததால், செயற்கைக்கோளுடனான தொடர்பை நாசா துண்டித்தது. இதையடுத்து இந்த செயற்கைகோள், புவிவட்டப் பாதையிலிருந்து கீழே இறக்கப்பட்டு மற்றொரு வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது.


 இந்த நிலையில் இந்த செயற்கைக்கோள் பூமி மீது மோதும் அபாயம் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த செயற்கைக்கோளின் சில பகுதிகள் பூமி மீது மோதியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.




 ஆனால் பூமியின் எந்தப் பகுதி மீது செயற்கைக்கோள் மோதியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதுதொடர்பான ஆய்வில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். செயற்கைக்கோள் மோதியதால் யாரும் காயமடையவில்லை என நாசாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி தினமணி 


22:65(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம்விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.


3:83அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.




7:54நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் 

Monday, September 5, 2011

"இல்லை இல்லை நான் நாசமாகத்தான் போகிறேன் என்ன பந்தயம்"

ரொம்ப நாளக்கி பின்னாடி சந்திக்கிறதுல மகிழ்ச்சி,எல்லாருக்கும் அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
கண்ணியம் வாய்ந்த,அருள் பெற்ற ரமலான் மாதம் நம்மை விட்டு விடை பெற்று விட்டது.நம் அனைவர் பாவங்களையும் ஏக இறைவன் அல்லாஹ் மன்னித்து அருள்வானாக ஆமீன்.

ரொம்ப நாளக்கி பின்னாடி சந்திக்கிறதுல - ரொம்பவே நிறைய மாற்றங்கள்.

நாத்திகம் பேசிக் கொண்டு,நாட்களைக் கடத்திக் கொண்டு நரக விளிம்பில் இருக்கும் நாத்திக மாக்களுக்கு - இஸ்லாம் விடும் சவால்களை நம் சகோதரர்கள் அழகான முறையில் எடுத்து வைக்கிறீர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

தங்கள் மூளையை ஒழுங்காக உபயோகித்து,சிந்தித்து,ஆய்ந்து,உணர்ந்து ஏக இறைவன் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கே நன்மையாகும்,"இல்லை இல்லை நான் நாசமாகத்தான் போகிறேன் என்ன பந்தயம்" என் அவர்கள் (நாத்திகவாந்திகள்)இருப்பார்களேயானால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.

 அந்த நாத்திகர்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

ஒரு நாத்திகன் ஒரு முஸ்லிமிடம்  சொன்னான்,"இல்லாத கடவுளுக்கு ஏன்
இப்படி நீங்கள் வணங்குகிறீர்கள்,சொர்க்கம்,நரகம் உண்டென நம்புகிறீர்கள்?இப்படி இறைவன்,இறைவன் என்று அவனுக்கு பயப்படுகிறீர்கள்?என்று.

அதற்கு பொறுமையாக அந்த முஸ்லிம் சொன்னார் ,"நீ சொல்வது போல், உன் கூற்றுப் படி இறைவன் இல்லையென்றாலும்  எனக்கு நஷ்டம் ஏற்படப்போவதில்லை,ஆனால் அப்படி ஒரு இறைவன் இருந்தாலும் எனக்கு நஷ்டம் ஏற்படப்போவதில்லை,காரணம் நான் அவனை - அந்த ஒருவனை ஏற்றுக்கொண்டுள்ளேன்,தொழுகிறேன்,வணங்குகிறேன்.எனக்கு எப்படி இருந்தாலும் கவலையோ,துக்கமோ இல்லை.எனவே எனக்கு அவன் சொர்க்கம் தருவான்,ஆனால் நீயோ,அந்த ஏகனை மறுக்கிறாய்?உன் நிலை என்ன என்பதை சிந்தித்துப் பார்,உனக்குத்தான் நஷ்டம்"என்றார்.


 அந்த முஸ்லிமின்  மறுமொழி கேட்டு வாயடைத்துப் போனான,
அந்த நாத்திகன். 


நீங்களும் சிந்தியுங்கள் இன்றைய 
 நாத்திகர்களே,நஷ்டம் யாருக்கென்று!