Sunday, July 25, 2010

யாரோ எவரோ ரகசியமாய் ?

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாகஇருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர்நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்குபெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறதுஎன்பதை இக்கட்டுரையில் காண்போம்.

குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள்வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


பொது இடங்களில் காமிராக்கள் :


பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.


ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றியவிழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.


பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :


பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம்செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.


பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :


பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.


மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :


மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.


இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான்.


இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.


ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்கதுணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.


துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்குபொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :


நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.


ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது


என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.


இந்தகண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு


இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.


நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது.

-----------------------------------------------------------
4:115
எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். 

6:31
ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். 

13:18
எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகவும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம். 
24:31
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.


திருக்குர்ஆன்
 

Tuesday, July 20, 2010

தாய்ப்பால் மகத்துவம்


நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." 
31:14  திருக்குர்ஆன்
------------------------------------------------------------------

தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்!

இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்!

மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.
இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது.
ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது

குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது.
பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது.

குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது.

குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.

தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி.

தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது.

வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை.

வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.
தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன.

. தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம்.

தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது.

வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும்.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன.

போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.

SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு.
பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது.

ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது.

திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.
பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன.

தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது.

முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Monday, July 5, 2010

குளோனிங் – நகல் மனிதன் இஸ்லாத்தில்...

//குளோனிங் பத்தி குரானில் ஒன்னுமே சொல்லலையா!?//
வால்பையன்
-----------------------------------------------------------------------
குளோனிங் முறையில் மனிதனை உருவாக்கும் சாத்தியக் கூறுகள் நெருங்கியிருப்பதை சமீபத்திய விஞ்ஞான உலகம் தெரிவித்துள்ளது. இதை இஸ்லாம் ஒப்புக்கொள்கிறதா? புதிய உயிர் வரவின் முறை ஆண்- பெண் சேர்க்கையால் மட்டுமே நிகழும் என்றுதானே நம்பியிருந்தோம்…?
வினா: செழியன், அரசூர் 
------------------------------------------------------------------------
உழைக்க வேண்டிய முறையில் உழைத்தால் விஞ்ஞானம் எதையும் சாத்திமாக்கும் என்று உணரப்பட்டு அவை நிருபிக்கப்பட்டுவரும் காலத்தில் வாழ்கிறோம். குறிப்பாக 20ஆம் நூற்றாண்டிண் இறுதிப்பகுதியிலிருந்து விஞ்ஞான ஆதிக்கம் பூமியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கியுன்னது. அதில் ஒன்றுதான் குளோனிங் வரவு. ஆணின் உயிரணு மூலமாகத்தான் புதிய உயிர் உருவாகும் என்ற நம்பிக்கை முழுமையானதல்ல, உயிரணு இல்லாமலும் புதிய உயிரை உருவாக்கலாம் என்பதே குளோனிங் தத்துவம்.
ஆஸ்திரேலியாவில் டோலியென்ற செம்மறி ஆடு குளோனிங்கால் (நகல் உயிரியாய்) உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குரங்கு, மாடு போன்ற உயிரினங்களும் உருவாக்கப்பட்டன. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட மாட்டிலிருந்து இன்னுமொரு குளேனிங் மாட்டை (நகல் உயிரியாய்) ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கி விட்டனர். மனிதனை உருவாக்குவோம் என்று அறிவித்ததும் உலகம் முழுவதும் கடும் எதிப்பு ஏற்பட்டது.
அ. இருக்கும் மக்கள் தொகையையே தாங்கமுடியவில்லை (இந்த வாதம் போலித்தனமானது என்று முந்தைய பதில்களில் விளக்கியுள்ளோம்) அதைக் கட்டுப்படுத்தவே வழி தேடுகிறோம். இதில் குளோனிங் மனிதர்கள் வேறு உருவானால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று சிலரும்…
ஆ. மரபணுவிலிருந்து நகல் எடுக்கும்போது எந்த மனிதனிடமிருந்து எடுத்தோமோ அவனது முழுத்தன்மையும் குழந்தைக்கு வர வாய்ப்பிருக்கின்றது. (இது குறித்து விஞ்ஞானிகளுக்கு மத்தியில பலத்த கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன) ஒருவேளை அப்படி வந்து விட்டால் அதன் தன்மையை சிந்திக்கவே முடியாமல் போய்விடும் என்று சிலரும் அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக நகல் மனிதனை உருவாக்கும் முறை இன்னும் துவங்கப்படவில்லை. இருப்பினும் உருவாக்கும் வழி அப்பட்டமாக சொல்லப்பட்டு விட்டது.
சிந்திக்கும் திறனும், உண்மையை அறியும் பரந்த மனப்பக்குவமும் உள்ளவர்களுக்கு உயிரணு இல்லாமலும் குழந்தை உருவாகும் என்ற அறிவைப் போதிக்க குர்ஆன் அழைக்கிறது. அதைப்பார்க்குமுன் குளோனிங் என்றால் என்ன? என்பதை விளங்குவோம்.
குளோனிங் முதல் உயிர் டோலி இது எப்படி உருவானது? ஒரு வெள்ளை நிற செம்மறி ஆட்டின் பால் மடியிலிருந்து ஒரு நியூக்லியஸை (மரபணுவை) எடுத்துஇ இன்னெரு ஆட்டிலிருந்து ஒரு சினை முட்டை எடுக்கப்பட்டு அதன் நியூக்லியஸை அகற்றி வெள்ளையாட்டின் மரபணுவை சினை முட்டையில் வைத்து பொருந்துகின்றதா என்றறிந்து, பொருந்தி கொண்டபின் (கருத்தரித்தபின்) அதை செம்மறி ஆட்டின் கருப்பையில் வைத்துவிட்டார்கள் 150 நாட்களுக்குப்பிறகு டோலி பிறந்தது. எந்த ஆட்டிலிருந்து மரபணு எடுக்கப்பட்டதோ ஆந்த ஆட்டைப் போன்றே நகல் எடுத்ததுப்போன்று பிறந்த குட்டி இருந்தது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுதான் முதல் குளோனிங் வரலாறாகும்.
ஒரு பெண்ணாட்டின் வெளிப்புரத்திலிரந்து மரபணுவை (ஜீனை) எடுத்து அதே ஆட்டின் சினை முட்டையில் வைத்து அந்த ஆட்டின் நகலை உருவாக்கலாம். ஒரு மாட்டின் மரபணுவை அதன் கருவறையில் வைத்து அதே போன்று மாட்டை உருவாக்கலாம் என்ற நிரூபணத்தின் அடிப்படையில்.
மனிதனின் மரபணுவிலிருந்து அதே தன்மையுடைய குழந்தையை உருவாக்குவது பெரிய விஷயமல்ல. ஒரு பெரும் சமூகத்திற்கு நேர்வழி காட்ட வந்த இறைவனின் தூதரான ஈஸா(அலை)(ஏசு) அவர்களின் பிறப்பில் இன்றைய குளோனிங்கின் தன்மைகள் எல்லாமும் ஒத்துப்போகக்கூடிய ஆதாரங்கள் குர்ஆனில் கிடைக்கின்றன. தந்தையின்றி ஆணின் உயிரணுவின்றி குழந்தையை உருவாக்க முடியும் என்கிறது குளோனிங்இ மரபணுவின் தன்மைகள் குழந்தைகளிடம் இருக்கும் என்கிறது குளோனிங்.
ஈஸா(அலை) வரலாற்றைப் போதிக்கிறது குர்ஆன்,
தேவதூதர் ஒருவர் மரியம் (மேரி)யிடம் தோன்றி பரிசுத்த புதல்வர் பற்றி நன்மாராயம் கூறுகிறார். (அல்குர்ஆன், 19:19)
அதற்கு மரியம் (மேரி)இ எந்த ஆடவனும் என்னைத் தீண்டவில்லைஇ நான் நடத்தைக் கெட்டுப்போனப் பெண்ணுமில்லைஇ இந்நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாக முடியும்இ எனக்கேட்டார். (அல்குர்அன்இ 19:20)
அன்றுவரை ஏன் நேற்றுவரை இருந்த இயற்கை மரபுப்படி ஒரு ஆணால் மட்டுமே ஒரு பெண்ணைக்கர்ப்பம் தரிக்கச் செய்ய முடியும் என்ற யாதார்த்தக் கோட்பாட்டுடன் மரியம் (மேரி) ஆட்சேபனைத் தெரிவிக்கிறார்.
திருமணத்தின் மூலம் குழந்தை உருவாக வாய்ப்புள்ளது எனக்கு திருமணமாகவில்லை. ஒழுக்ககேட்டால் குழந்தைபெறும் வாய்ப்புள்ளதுஇ நான் நடத்தைக்கெட்டவளுமல்ல. இரண்டு வழியுமில்லாமல் குழந்தையா? இது சாத்தியமா? என்பதே மரியம் (மேரி) அவர்களின் சந்தேகம். அதற்கு இறைவன் பதிலளிக்கிறான்.
அது அவ்வாறுதான், இது எனக்கு மிகச்சுலபமானதே (உன் வயிற்றில் பிறக்கும் குழந்தையாகிய அவர்) மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சியாகவும், நம்முடைய அருளாகவும் அவரை ஆக்குவோம். இது விதிக்கப்பட்ட விஷயமாகும், என இறைவன் கூறினான். (அல்குர்ஆன்: 19:21)
” அது அவ்வாறுதான் இது விதிக்கப்பட்ட விஷயம்” என்ற திருக்குர்ஆனின் கூற்றுக்கள் மரபியல் உருவாக்கத்தைத் தீர்க்கமாக அறிவிக்கிறது. இது நடக்கும் என்று கூறும் குர்ஆன், சாத்தியமுண்டு என்பதை அறிவிக்கும் குர்ஆன். அது எப்படி? என்பதை மேரியிடம் விளக்கவில்லை. புரிந்து கொள்ளும் சக்தியிருந்தால் மட்டுமே விளக்குவதால் பலன் கிடைக்கும் அன்றைக்கு ஆண் துணையில்லாமல் குழந்தை உருவாவதே பெரும் வியப்பான விஷயம். அந்த சந்தர்ப்பங்களில் நகல் கருவியலைப் பற்றியெல்லாம் விளக்க முடியாது. அதே சமயம் பிற்கால அறிவு முதிர்ச்சி உள்ளவர்கள் புரிந்துக் கொள்ளும் விதத்தில் அந்த சம்பவம் கூறப்படுகிறது.
இது எனக்கு மிகச்சுலபமானதே என்ற கூற்று, இது இறைவனாகிய என்னால் மட்டுமே நிகழ்த்திக் காட்டப்படும் வேறு எவராலும் நிகழ்த்தவே முடியாததல்ல என்னைப் பொறுத்தவரை இது சுலபம் மற்றவர்கள் கடும் முயற்சி எடுக்கவேண்டும் என்ற பொருளை பொதித்து வைத்துள்ளது. இறைவன் மிக மிகச்சுலபமாக நிகழ்த்திய ஒரு கருவியல் உண்மையை அறிய மனிதனுக்கு 20 நூற்றாண்டுகள் தேவைப்பட்டுள்ளது.
”அவர் மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாவார்” என்ற உறுதிமொழி இது காலம்வரை ஆன்மீகத்திற்காகவே விளக்கப்பட்டு வந்தது. உண்மையுங்கூட அதுதான். இறைவனையும் அவன் அற்றலையும்இ தன்மைகளையும், பண்புகளையும் தன் பிறப்பின் மூலமாகவும் பிச்சாரத்தின் மூலமாகவும் உலகிற்கு உணர்த்திய இறைத்தூதர் ஈஸா(அலை) அவர்கள் பின்பொரு காலம் மீண்டும் வருவார், நீதிமிக்க ஆட்சியை உலகில் சாந்தி, சமாதானத்தைப் புதுபிப்பார், அவர் பெயரால் புனையப்பட்ட கதைகளையும் கறைகளையும் களைவார் என்ற மறுக்க முடியாத விதியின் அடிப்படையில் அவர் மனிதர்களுக்கு ஓர் (ஆன்மீக) அத்தாட்சியாவார்.
அத்தாட்சி என்பதின் விளக்கம் இது மட்டும்தானா மனிதர்களுக்கு அத்தாட்சி என்பதில் ஆன்மீக மனிதர்கள் மட்டும்தான் அடங்குவார்களா- விஞ்ஞான மனிதர்கள் அடங்கமாட்டார்களா என்றெல்லாம் சிந்திக்கும்போது அவருடைய அத்தாட்சி விஞ்ஞான மனிதர்களுக்கும் உரியதுதான் என்பதை இன்றைய குளோனிங் நிருபித்துள்ளது.
 மரியம் ஈஸாவைக் கருவுற்று தொலைவிலுள்ள ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டார்.. (அல்குர்ஆன், 19:22)
மரபணுவின் மூலம் குழந்தைகளின் தன்மையைப்பற்றி விஞ்ஞானிகள் இவ்வாறு கருத்துக் கூறுகிறார்கள். அதாவது எந்த வயதுடைய ஆளிடமிருந்து மரபணு எடுக்கப்படுகிறதோ அந்த ஆளுடைய வயதுக்கு ஒத்தத் தன்மைகள் பிறக்கும் குழந்தையிடம் இருக்கும் வாய்ப்புள்ளது (மேலதிக விளக்கத்திற்கு ஜீன் சம்பந்தமான புத்தகங்களைப் படிக்கவும்)
அதாவது 20 வயதுடைய ஒரு ஆளிடமிருந்து மரபணு எடுத்து ஒரு குழந்தையை உருவாக்கினால்இ அந்த 20 வயது ஆளிடமுள்ள உடலியல் சார்ந்த தாக்கங்கள் (பேச்சாற்றல்இ சிந்திக்கும் திறன்இ பாலியல் உணர்வுகள் போன்றவை) அந்தக் குழந்தையிடம் இருக்கும்இ இருக்க வேண்டுமென விஞ்ஞானம் எதிர் பார்க்கிறது. இதைக்குர்ஆன் முற்றாக ஏற்கவுமில்லைஇ முற்றாகப் புறக்கணிக்கவுமில்லை.
மரியம் (மேரி) குழந்தையைப் பெற்றுக்கொண்டு ஊருக்குள் வருகிறார் திருமணம் செய்யாமல் குழந்தையுடன் வருவதைக் கண்ட ஊரார்கள் மரியமைத் தூற்றுகிறார்கள். களங்கப்படுத்தப்படும் மரியமின் தூய்மையான கற்பு நெறி பாதுகாக்கப்பட வேண்டுமானால் அன்றைக்கு ஈஸா(அலை) ஏசு பேசுவதைத்தவிர வேறு வழியில்லை. இதுவும் அன்றைக்கு நடந்தேறியது.
மரியமின் ஒழுக்கம் குறித்து அம்மக்கள் சர்ச்சையில் ஈடுபடுகையில் மர்யம் தன் குழந்தையின் பக்கம் சுட்டிக்காட்டுகிறார். இந்தத் தொட்டில் குழந்தையோடு எங்களால் எப்படிப் பேசமுடியும் என்று அவர்கள் வினவியபோது…
”நான் இறைவனின் அடிமையாக இருக்கிறேன்இ அவன் எனக்கு வேத ஞானத்தைக் கொடுத்து என்னை அவனுடைய தூதராகவும் ஆக்கியிருக்கிறான்… என் தாயாருக்கு நன்றி செலுத்துபவனாகவும் என்னை ஆக்கியிருக்கிறான்… என்று தொட்டில் குழந்தை பேசியது” (அல்குர்ஆன்: 19:29,30,31)
ஈஸா- ஏசு தொட்டில் குழந்தையாய் பேசியதைப் பார்க்கும்போது. அவர் சம்பந்தமாக இறைவன் பயன்படுத்திய வார்த்தைகளை சிந்திக்கும்போதும் மரியம் அவர்களின் மரபணுவிலிருந்து ஈஸா(அலை) அவர்கள் உருவாகியிருக்கும் சாத்தியக் கூறுகள் இருப்பதை விளங்கலாம். ஒருவேளை நாளை குளோனிங் மனிதர்கள் உருவாகிய பிறகு விஞ்ஞானிகள் எதிர்பார்க்கும் இதர தாக்கங்கள் அதாவது பாலியல் போன்றவை அந்த மனிதர்களிடம் தென்பட்டாலும் அப்போதும் அது திருக்குர்ஆனுக்கு முரணான தகவலாக இருக்காது. ஈஸா(அலை) அவர்கள் பிறந்தபோது இந்தத் தாக்கங்கள் குறித்து வெளிப்படுத்தும் அவசியம் இல்லாமல் போனதால் குர்ஆன் அதை வெளிப்படுத்தவில்லை என்பதை விளங்கினால் இந்தப்பிரச்சனை நிறைவுக்கு வந்துவிடும் (இறைவன் எல்லாவற்றையும் மிக்க அறிந்தவனாக இருக்கிறான். ) எதிர்காலங்களில் இந்தப் பிரச்சனைகள் குறித்த ஆய்வுகள் இன்னும் விரிவாக வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.

http://tamilmuslim.wordpress.com/2008/01/09/wwwtamilmuslimcom/