Monday, February 7, 2011

இரவு மட்டும்.........


சமீபத்தில் ஒரு மருந்து கடை ரசீதின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த குறிப்புகள் மிகவும்உபயோகமாக இருந்ததால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவாக மருந்து சீட்டில் மருத்துவர்கள் குறிப்பிடும் சில  சுருக்கங்களின் விளக்கம்:-
STAT(statim) - Start Immediately - உடன்  தொடங்கவும்.
O.M.  Omni mane (Morning Only) காலை மட்டும்.
O.D.  Omni die(Daily Only)  தினசரி ஒன்று மட்டும்.
B.D  Bis die(Daily twice) தினசரி இரண்டு.
T.D.S  Ter die sumendus (Thrice daily) தினசரி மூன்று.
Q.D.S  Quarter die sumendus (Four times only) தினசரி நான்கு.
Q.Q.H  Quarta quaque hara(Every four hours) நான்கு மணி நேரத்திற்கு ஒன்று.
A.C./B  Ante cibum (Before Food) சாப்பிடும் முன்.
P.R.N.  Pro re neta (when required) தேவைப்படும் பொது.
S.O.S  Only acute pain. வலி ஏற்படும் பொது.
H.S.  One at night இரவு மட்டும்.

மருந்து/மாத்திரைகள் உபயோகிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:-

1. மருத்துவர் குறிப்பிட்ட காலம்வரை எழுதிக்கொடுக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் இடைவிடாமல் சாப்பிடவும்.

2. மருந்துகள் வாங்கும்போது மருந்தின் பெயர்காலாவதியாகும் தேதி போன்றவற்றை அட்டையில் சரிபார்த்து வாங்கவும். போதிய வெளிச்சத்தில் மருந்தை சரிபார்க்காமல் உட்கொள்வதை தவிர்க்கவும்.

3. மாத்திரை அட்டையிலிருந்து பிரித்தேடுக்கும்போது மீதமுள்ள மாத்திரைகள் பக்கம் காலாவதியாகும் தேதி இருக்கும்படி பிரிக்கவும்.

4. மருந்துகளை குழந்தைகளின் கைகளில் எட்டாமலும்உலர்ந்த இடத்திலும் வைக்கவும்.

5. மருத்துவரிடம் செல்லும்  ஒவ்வொரு முறையும் தாங்கள் வாங்கிய மருந்து சீட்டையும்கடை ரசீதையும் தவறாமல் எடுத்து  செல்லவும்.

6. ஏதேனும் மருந்துகள் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால் மருந்தாளுனரிடம் தயக்கமில்லாமல் கேட்கவும்.   

11 comments:

GEETHA ACHAL said...

பகிர்வுக்கு நன்றி...நல்ல மருந்து கடை...

Unknown said...

Very useful info.

பாத்திமா ஜொஹ்ரா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி கீதா,சகோதரர் அஹமது

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

பகிர்வுக்கு நன்றி.

பாத்திமா ஜொஹ்ரா said...

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி சகோ ஆயிஷா

Anisha Yunus said...

ஏன் ஃபாத்திமாக்கா தலைப்பெல்லாம் பயங்காட்டற மாதிரியே வெக்கிறீக? என்னை மாதிரி சின்னப்புள்ளைங்க பயந்திடும்... பாத்து செய்ங்க. :)

பாத்திமா ஜொஹ்ரா said...

ஏன் ஃபாத்திமாக்கா தலைப்பெல்லாம் பயங்காட்டற மாதிரியே வெக்கிறீக? என்னை மாதிரி சின்னப்புள்ளைங்க பயந்திடும்... பாத்து செய்ங்க. :


நீங்களுமா?

Jaleela Kamal said...

இதற்கு அன்ன்றே பதில் போட்டேன் கம்புயுட்டர் பிரச்சனையில் பதிவாகல போல

இங்கு எல்லாம் அட்டையின் மேலேயே எழுதி கொடுத்துடுவாங்க.
இதையும் தெரிந்து வைத்து கொளவது நல்லது

பாத்திமா ஜொஹ்ரா said...

வாங்க ஜலீலா அக்கா.உங்கள் மேலான வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

Anisha Yunus said...

//நீங்களுமா///

அப்படின்னா? நீங்களும் சின்னப்பிள்ளையான்னு கேக்கறீங்களா இதிலென்ன டவுட்டு உங்களுக்கு ஹி ஹி :)

PUTHIYATHENRAL said...

இந்தியா மற்றும் உலக நாடுகளில் நடக்கும் சம்பவங்கள், இங்கே செய்திகளாக வெளியிடபடுகிறது. இன்று பத்திரிக்கை துறை என்பது அதிகாரவர்க்கத்திடமும், பாசிசவாதிகளின் கைகளிலும் சிக்கி இருகின்ற காரணத்தால் உண்மை செய்திகள் மறைக்கப்படுகின்றன. இங்கு வெளியிடபடும் செய்திகள் அனைத்தும் நடந்த சம்பவங்களே! இதில் வன்முறையை தூண்ட ஒன்றும் இல்லை. நடந்த சம்பவங்களே இங்கு எழுதப்படுகிறது. நீங்கள் எழுதியதை படித்தே வன்முறை என்று சொல்கிறீர்கள் இதை அனுபவித்தவர்களுக்கு இது எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும். இது எல்லாம் இங்கு ஏன் வெளியிடப்படுகிறது என்றால்? இது போன்ற வன்முறைகள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதும், மக்களை விழிப்புணர்வு அடியச்செய்ய வேண்டும் என்பது ஒன்றுதான் நோக்கமே தவிர இதில் எந்த சுயலாபமும் இல்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். வெறும் வாயால் அமைதி, அமைதி, அமைதி என்று சொல்வதால் அமைதி வந்துவிடாது. எதுவெல்லாம் அமைதியை குலைக்க கூடியது என்பதை உணரவேண்டும், உணர்த்தவேண்டும். எழுத்து போராட்டம் என்பது ஒரு அமைதி போராட்டம்தான் இது ஒன்றும் வன்முறை இல்லை. உங்களது கருத்துக்கு நன்றி. உங்களது கருத்துக்களை சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.இதை நீங்கள் வெளியிட வேண்டாம். இது உங்கள் கருத்துக்கு பதிலாக நீங்கள் படிப்பதற்காக கொடுக்கப்பட்டது. இதில் மோலும் கருத்து இருந்தால் நீங்கள் தெரிவிக்கலாம்.