Showing posts with label இஸ்லாம் விடும் சவால். Show all posts
Showing posts with label இஸ்லாம் விடும் சவால். Show all posts

Monday, September 5, 2011

"இல்லை இல்லை நான் நாசமாகத்தான் போகிறேன் என்ன பந்தயம்"

ரொம்ப நாளக்கி பின்னாடி சந்திக்கிறதுல மகிழ்ச்சி,எல்லாருக்கும் அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
கண்ணியம் வாய்ந்த,அருள் பெற்ற ரமலான் மாதம் நம்மை விட்டு விடை பெற்று விட்டது.நம் அனைவர் பாவங்களையும் ஏக இறைவன் அல்லாஹ் மன்னித்து அருள்வானாக ஆமீன்.

ரொம்ப நாளக்கி பின்னாடி சந்திக்கிறதுல - ரொம்பவே நிறைய மாற்றங்கள்.

நாத்திகம் பேசிக் கொண்டு,நாட்களைக் கடத்திக் கொண்டு நரக விளிம்பில் இருக்கும் நாத்திக மாக்களுக்கு - இஸ்லாம் விடும் சவால்களை நம் சகோதரர்கள் அழகான முறையில் எடுத்து வைக்கிறீர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

தங்கள் மூளையை ஒழுங்காக உபயோகித்து,சிந்தித்து,ஆய்ந்து,உணர்ந்து ஏக இறைவன் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கே நன்மையாகும்,"இல்லை இல்லை நான் நாசமாகத்தான் போகிறேன் என்ன பந்தயம்" என் அவர்கள் (நாத்திகவாந்திகள்)இருப்பார்களேயானால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.

 அந்த நாத்திகர்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

ஒரு நாத்திகன் ஒரு முஸ்லிமிடம்  சொன்னான்,"இல்லாத கடவுளுக்கு ஏன்
இப்படி நீங்கள் வணங்குகிறீர்கள்,சொர்க்கம்,நரகம் உண்டென நம்புகிறீர்கள்?இப்படி இறைவன்,இறைவன் என்று அவனுக்கு பயப்படுகிறீர்கள்?என்று.

அதற்கு பொறுமையாக அந்த முஸ்லிம் சொன்னார் ,"நீ சொல்வது போல், உன் கூற்றுப் படி இறைவன் இல்லையென்றாலும்  எனக்கு நஷ்டம் ஏற்படப்போவதில்லை,ஆனால் அப்படி ஒரு இறைவன் இருந்தாலும் எனக்கு நஷ்டம் ஏற்படப்போவதில்லை,காரணம் நான் அவனை - அந்த ஒருவனை ஏற்றுக்கொண்டுள்ளேன்,தொழுகிறேன்,வணங்குகிறேன்.எனக்கு எப்படி இருந்தாலும் கவலையோ,துக்கமோ இல்லை.எனவே எனக்கு அவன் சொர்க்கம் தருவான்,ஆனால் நீயோ,அந்த ஏகனை மறுக்கிறாய்?உன் நிலை என்ன என்பதை சிந்தித்துப் பார்,உனக்குத்தான் நஷ்டம்"என்றார்.


 அந்த முஸ்லிமின்  மறுமொழி கேட்டு வாயடைத்துப் போனான,
அந்த நாத்திகன். 


நீங்களும் சிந்தியுங்கள் இன்றைய 
 நாத்திகர்களே,நஷ்டம் யாருக்கென்று!