Showing posts with label பெருநாள். Show all posts
Showing posts with label பெருநாள். Show all posts

Thursday, November 26, 2009

அந்த நாள் ஞாபகம் வந்ததோ?ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள்!


பொறைய கண்டாச்சு

பொறைய கண்டாச்சு

நாளக்கி பெருநா
நம்மளுக்கு ஜோக்கு
கூழை கடா அறுத்து
கூடி கூடி திங்கலாம்.


பெருநாள்ன்னு சொன்ன உடனே,சின்ன புள்ளையில பிறையை கண்டவுடனே இப்பிடி ஆடிப் பாடுவோம்.அந்த ஞாபகம்தான் வருது.எங்க வூடு சி எம் பி லைன்ல இருக்கிறதால, சித்திக் பள்ளி,ஹனீப் பள்ளி இப்பிடி ஒவ்வொரு தெருவா போய் நிறைய எங்க வயசு பிள்ளைங்களோட பாடுவோம்,அந்த இனிமையான நாள்,ஞாபகம் வருது,

அமெரிக்காவுல இருந்தாலும்,அதிரையில,சென்னையில இருந்தாலும்,அந்த நாட்களை யாராலும்.சின்ன வயசுக் குறும்புகளை மறக்க முடியுமா?


அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

Saturday, September 19, 2009

பெருநாள் வாழ்த்துக்கள்

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம்। மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

உலக மாந்தர் யாவருக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!
இன்ஷா அல்லாஹ்,நாளை முதல்,எதிர்பாருங்கள்।
கலக்கிடுவோம்ல!!!