Saturday, May 29, 2010

தவிச்சுப்போன சுல்தானின் மனசு படித்தேன்,பகிர்ந்தேன்!

சுல்தானின் மனசு துடித்தது எதற்காக ? அந்த துடிப்பு என் மனசுக்குள்ளும்.எத்தனையோ ஆயிரம் நபர்களை பார்க்கிறோம,பழகுகிறோம்.ஆனால் எத்தனை பேரிடம் இறைவனால் அங்கீகரிகப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாத்தை எடுத்து சொல்லி இருக்கிறோம்.நாம் மட்டும் சொர்க்கம் போனால் போதுமா?அவர்களை நரகத்தில் விட்டு விட்டு ...... இல்லை ....இல்லை வேணாம் வேண்டவே வேண்டாம்.இன்ஷா அல்லாஹ் நாம் பார்க்கும் மக்களிடம் சத்திய இஸ்லாத்தின்  செய்தியை எடுத்து சொல்வோம்.உலகின் ஒவ்வொரு நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இஸ்லாம் வெகு வேகமாய் பரவி வருகின்றது.(உதாரணம் சமீபத்திய நல்ல வரவு முன்னாள் பெரியார்தாசன்-இப்பொழு பேராசிரியர் அப்துல்லா)நம் பங்களிப்பு எப்போது?.இன்றே ஆரம்பிப்போம் அழைப்புபணியை இன்ஷா அல்லாஹ் .

என் எண்ணங்களை சொல்லவும்,செயல்படுத்தவும் ஞாபகமூட்டிய சகோ சுல்தான் அவர்களுக்கு என் நன்றிகள் பல.

நான் சுல்தான் என்ற பெயரில் பதிவை ஏற்படுத்தி சில இடுகைகளை இட்டிருக்கிறேன். அந்தப் பதிவிலிருந்த சில இஸ்லாமிய இடுகைகளை தனியே எடுத்து இந்த பதிவைத் தொடங்கினேன். இஸ்லாத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை நீக்குவதற்காக என்னால் இயன்ற முயற்சிதான் இப்பதிவு. தேவையுள்ளவர்கள் அவ்வப்போது வந்து படிக்கிறார்கள். யாரோ ஒரு நண்பர் இன்று லிங்க் கொடுத்ததால், இதைப் பார்வையிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்திற்கு, இந்த பதிவு பிடிக்கவில்லையென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே. என் இந்த பதிவை ஸ்பேம் என்று ரிப்போர்ட் செய்திருக்கின்றார்கள்.

அந்த நல்ல உள்ளங்களுக்கு ஏற்பட்ட வயிற்றெறிச்சலில்தான் நான் உறங்கிப் போனது தெரிந்தது. அவர்கள் வயிற்றெறிச்சலை வளர்க்க இனி அடிக்கடி இங்கேயும் எழுத முயற்சிப்பேன். டைஜின் போன்ற மாத்திரைகளை கொஞ்சம் தாராளமாக கைவசப்படுத்திக் கொள்ளுங்கள்.

என் நண்பர் ஒருவர் அவர் நண்பரோடு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே அறையில் வசித்து வந்தார். பின்னர் நம் நண்பரின் நண்பர் வாழ்வின் முன்னேற்றம் வேண்டி கனடா போய்ச் சேர்ந்தார். அங்கே போன ஓரிரு ஆண்டுகளில் அவர் இஸ்லாத்தை தம் வாழ்வியலாக ஏற்றார். சில மாதங்கள் கழித்து அவர் நம் நண்பருடன் போனில் பேசும் போது தாம் முஸ்லீமான விடயத்தையும் தெரியப் படுத்தினார்.

அப்போது நம் நண்பர், "ஏனப்பா இவ்வளவு ஆண்டுகள் என் கூட இருந்தாய். இவ்வாறு ஒரு நாட்டமுள்ளது எனக்கு தெரியவுமில்லை. நீர் சொல்லவுமில்லையே" எனக் கேட்டபோது, அவரோ, "நான் இவ்வளவு ஆண்டுகள் உன்னுடன் இருந்தும் நீ என்றாவது இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லி இருக்கிறாயா? நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம். சொல்ல வேண்டியது உனக்கு கடமையில்லையா? ஆனாலும் இறைவன் எனக்கு இப்போதுதான் நாடியிருக்கிறான் போலிருக்கிறது" என்று சொன்னாராம். அதைக் கேட்டதிலிருந்து என் நண்பர் பல நாட்கள் தவித்தது போலவே, நானும் சில நாட்கள் தவித்திருக்கிறேன்.

என்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்.

இறைவனின் நாட்டப்படி இனி தொய்வின்றி தொடத் தொடர முயற்சிப்பேன்.





thanks to

http://islamicfold.blogspot.com/

9 comments:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//என்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்//

சரியாக சொல்லியிருக்கீங்க சகோதரி.

நம்மை திட்டினாலும், கேவலப்படுத்தினாலும் இஸ்லாத்தை எத்திவைப்பது நம் அனைவரின் கடமை.

தொடருங்கள் உங்கள் எழுத்துப்பணியை.

அதிரை வலைப்பூ திரட்டி
அதிரைமணம்

பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

Anisha Yunus said...

பாத்திமாக்கா,

நான் இப்பொழுது எழுதுவதை தவறாக எண்ண வேண்டாம். எந்த நேரத்திலும் உங்கள் சுய விருப்பு வெறுப்புக்களை இஸ்லாத்தின் பார்வையில் காட்டாதீர்கள்.

//இதைப் பார்வையிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்திற்கு, இந்த பதிவு பிடிக்கவில்லையென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே. //

நான் மேற்கண்ட வரியைத்தான் கூறினேன். கோபம் எழுவது சகஜமான் விஷயம்தான், ஆனால் அதை எந்த இடத்தில் எப்படி உபயோகப் படுத்துகின்றோம் என்று பார்க்கவும் வேண்டும். தயவு செய்து அந்த வரியை நீக்கி விடுங்கள். இந்த மறுமொழியையும். நாளை யாரும் இஸ்லாமிய பெண் இப்படி எழுதுகின்றாள் என்று கூறும்படி விட்டுவிடாதீர்கள். இதற்கு மேல் நான் பயான் பண்ண விரும்பவில்லை, இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் எளிமையாக்கி வைப்பான்....தயவு செய்து பொறுமை காக்கவும். ஜஸாகல்லாஹு கைர்.

வ ஸலாம்.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,

//நான் இவ்வளவு ஆண்டுகள் உன்னுடன் இருந்தும் நீ என்றாவது இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லி இருக்கிறாயா? நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம்//

நிச்சயமான வார்த்தை. சொல்ல வேண்டியது நம் கடமை. நேர்வழி காட்டுவது இறைவனின் நாட்டம். மிகச் சிறந்த தாவாஹ்க்களில் ஒன்று நாம் ஒரு முழுமையான முஸ்லிமாக வாழ்வது.

சகோதரர் ஜோஷ்வா எவன்ஸ் அழகாக கூறினார்,

//என் நண்பன் ஒருவன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை தீர்க்கக்கூடிய மருந்து எனக்கு கிடைத்து, அதை நான் அவனிடம் கொடுக்காமல் மறைத்தால் எப்படி இருக்கும்?

அதைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பலரும் இணைவைத்தல் என்ற தீவிர நோயால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். அறிகுறிகள் இல்லாத நோய் இது. நம்மிடம் அதற்கு இஸ்லாம் என்ற மருந்து இருந்தும் அதை நாம் மறைக்கிறோம், கொடுக்க மறுக்கிறோம்//

வாழ்ந்து காட்டுவோம், எடுத்து சொல்லுவோம்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Unknown said...

எடுத்திட்டமைக்கு நன்றி சகோதரி. ஜஸாக்கல்லாஹ்

adiraidailynews said...

என்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்//

சரியாக சொல்லியிருக்கீங்க சகோதரி.

Thenammai Lakshmanan said...

நல்ல பகிர்வு சகோதரி.

ராஜவம்சம் said...

தொடரட்டும் உங்கள் தீன் பனி

Jaleela Kamal said...

//என்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்//

அருமையாக எழுதி இருக்கீங்க பாத்திமா/

நல்ல தலைப்பும், ப்கிர்தலும் அருமை.

தொடருங்கள்.

Asiya Omar said...

இன்று தான் தங்கள் பக்கம் வரும் வாய்ப்பு கிடைத்தது.உங்கள் ப்ளாக் நல்ல பகிர்வு.