Saturday, October 10, 2009

வேணாங்க இந்த பொழப்பு.

பல பதிவுகளுக்குள்ள செய்திகளை சகோதரர்கள் நம்மிடையே பகிர்ந்துகொண்டுள்ளனர்.அல்ஹம்துலில்லாஹ்.அனைவருக்கும் நன்றி.அவைகளுக்கு பதில் தரும் விதமாக,நானும் பின்னூட்டமிட்டால்,இன்னும் நீண்டுவிடும்.எனவே,அவைகளை வைத்து,தனி கட்டுரை போட்டால்,இன்னும் ஈசியாக இருக்கும் என எண்ணி,இங்கு பதிவிடுகிறேன்.

//குறிப்பாக கலிஃபோர்னியா மாநிலத்தில் வேலை செய்யும் 95% அதிரைவாசிகள் இது போன்ற கடைகளில்தான் ஊழியம் செய்கிறார்கள். சிலர் இதை நியாயப் படுத்தியும் வாதம் செய்கிறார்கள். நாம்தான் குடிக்கவில்லையே மதுவை விற்கதானே செய்கிறோம். இது கூடும் என்று சொந்த ஃபத்வா கொடுத்த்க் கொள்கிறார்கள்.அக் கடைகளில் மதுவகைகள், ஆபாச புத்தகம்/விடியோ சி.டி, போதை மருந்து ஏற்றும் உபகரணங்கள்,வட்டி,இன்னும் ஏராளமான ஹராமான பொருள்கள் தினசரி விற்கப்பபடுகிறது.முழு நேரமும் கல்லாவில் நின்று விற்பவர்களும் நமது ஊர் மக்களே!இக்கடைகளில் வேலை செய்வதால் மேற்கண்ட தவறான பழக்கங்களிலும் சிலர் அடிமைபடுத்தப்படுகிறார்கள். எச்சரிக்கை ஹலால் ஹராம் பேனுங்கள்//

சகோ உமர் பாருக்கின் கருத்து என் மொத்த கட்டுரையையும் பிரதிபலிப்பதாக உள்ளது.அந்த சகோதரரின் கருத்து,எல்லா மக்களையும் சென்ற சேரட்டும்.



//அஸ்ஸலாமு அழைக்கும், உங்கள் கருத்துகள் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள், அதிராம்பட்டினம் கலிபோர்னியா வாசிகள் நிறையபேர் லிக்கர் ஷாப் யானும் சாராய கடைலதான் வேலை பார்க்கிறார்கள் அங்கு சாராயம் மட்டும் இல்ல லாட்டரி என்கிற சூது மற்றும் செக்கேசின்ங் என்கிற வட்டி மற்றும் ஆபாச புத்தகம்/விடியோ சி.டி போன்ற எல்லா ஹராமான பொருள்கலும் இருக்கு நிறையபேர் வேலைபார்க்கிரங்கள் இதில் சிலர் முதலாளியாகவும் இருக்காங்க, ரொம்ப கவலைபடுற செய்தியா இருக்கு. இதில் மார்க்கம் தெரியதாவர்கள் தான் இப்படி என்றால் வூரில் வாய்கிழிய தவ்கீத் பேசியவர்களும் கொள்கை கோமான்களாக இருந்தவர்களும் இதில் அடக்கம். என்ன செய்ய பணம் பத்தும் செய்யும் என்பார்கள் அது இதுதான் போல இருக்கு.//

அபூ சுமையாவின் இந்த ஆதங்கம் நமக்கு புரிகிறது.சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து,திருந்தினால்,அவரவர்க்கு நல்லது.

//Allah May accept our good deeds.

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (2:168)

நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும் அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (2:169)

We need to remind our brothers/sisters about Islamic principles.//

ஜகாங்கீரின் குரான் நினைவூட்டல் மிக அருமை.நன்றி

//சகோதரி பாத்திமா ஜொஹராவுக்கு, உங்கள் கருத்துக்கள் சிறப்பாக உள்ளது குறிப்பாக நம் மார்க்கத்தை ஒட்டி உள்ளது, ஆனால் உங்கள் எழுத்து முறை மற்றும் தலைப்பு மிக மோசமாக உள்ளது. ஒன்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் "எல்லா ஆண்களும் கேட்டவர்கள் இல்லை அதே சமயத்தில் எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லை" இதை நீங்கள் கட்டுரை எழுதும்போது மனதில் கொள்ளவேண்டும். உங்களுடைய கட்டுரையை பலர் படித்து பயன்பெற வேண்டுமானால் நீங்கள் எழுத்து நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்.//


//Yes, I accept Saudi Friends comment. Your message could be important to the public. But, you have to say in good manner, we are muslims and have to respect all. If your aim is writing against men, you should not take holy quran verses and Rasool (S.A.W.S) hadiths. If your blog should be read by all, and should be helpful to public, avoid such titles. Everyone who gave comments in your site, is happy because you are a islamic women who have come forward to create a blog. I am proud to see your site. It is my advise to my sister.

Noor.//

சவூதி பிரன்ட்,நூர் உங்கள் கருத்து மிக்க நன்று.இன்ஷா அல்லாஹ்,என் தலைப்பிலும்,வார்த்தைகளிலும் மிருதுவானத்தை கை கொள்கிறேன்.ஆண்கள் என் எதிரிகள் அல்ல.ஆனால். பொதுவாக ஆண்கள் தன கைகளால் சம்பாதித்து,அவர் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பில் உள்ளவர்,ஹலாலான சம்பாத்தியத்துக்கு பதில் ஹராமான சம்பாத்தியம் செய்து,மனைவின் கழுத்தில் ஹராமான நகைகளை அணிவித்து அழகு பார்த்தும்,ஹராமான சம்பாத்தியத்தில் சாப்பாடு போட்டும் வரும் நபர்கள்,இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை பேணாதவர்கள்,(நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஆற்றிய இறுதி உரையில் பெண்கள் பற்றிய கரிசனம் பற்றி இந்து,கிறிஸ்தவ சகோதர,சகோதரிகள் அறிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவர்கள்)இவர்கள் மேல் தான் கோபமே தவிர,உங்களைப்போன்ற நல்ல சகோதரர்கள் மேல் அல்ல.

2 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

யார் பெயரையும் குறிப்பிடாமல்,மனம் நோகாமல்,மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை தெளிவாக உணர்த்தும் உங்களை வாழ்த்துகிறேன்.இன்ஷா அல்லாஹ்,எல்லாரும் திருந்தி,அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெறுவோம்

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி பேனாமுனை .அடிக்கடி வாங்க.