Sunday, October 18, 2009

இவர்களால் நாறிப்போன இந்தியாவின் பெயர்!

நியூயார்க்பங்குச் சந்தையில், "இன்சைடர் டிரேடிங்' மூலம் 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த இந்தியர்கள் இருவர் உட்பட ஆறு பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் இந்தியர்கள் அனில் குமார், ராஜிவ் கோயல். நியூயார்க்கில் வசிக்கும் கோடீஸ்வரர் ராஜ ரத்தினம். இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இவர், கேலன் குரூப் நிறுவனங்களின் தலைவர்.இவர்களும், நியூயார்க்கை சேர்ந்த டெனில்லா சிசி, ராபர்ட் மொபத், மார்க் குர்லாண்ட் ஆகிய மேலும் மூன்று பேரும் சேர்ந்து பங்குச் சந்தையில், "இன்சைடர் டிரேடிங்' மூலம் 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது கண்டுபிடிக்கப் பட்டது.

அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய மோசடிகளில் இதுவும் ஒன்று. இதையடுத்து, கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர்.இவர்கள் ஆறு பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். "இவர்கள் ஆறு பேரும் பங்குச் சந்தையில் பணியாற்றும் சிலர் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தகவல்களைப் பெற்று, அதை மற்றவர்களுக்கு தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் வர்த்தகத்தை நடக்க வைத்து, பெரும்மோசடி செய்துள்ளனர்' என, நியூயார்க் அட்டர்னி ஜெனரல் பிரீத் பாராரா கூறியுள்ளார்.
-------------------------------------
இப்போ நம்ம இந்தியர்கள்தான் உலகம் முழுக்க பொய்,பித்தலாட்டம்,பிராடு வேளைகளில் இறங்கியுள்ளனர்.எந்த ஒரு நியூஸ் சேனலை திருப்பினாலும்,இதோ போன்ற செய்திதான்.உள்நாட்டிலும் இப்பிடி,வெளி நாட்டில் வந்தும் இப்பிடியா.
சில கம்பெனிகளின் வெப் சைட்டை திறந்து பார்த்தால்,ஒரு எச்ச்காரிக்கை வரும்,அது"இந்தியாவுக்கு,இந்தியர்களுக்கு சரக்கு அனுப்ப முடியாது"(due to fraud)என்று.அந்த அளவுக்கு இந்தியாவின் பெயர் இவர்கள் மூலம் நாறிப் போய்விட்டது.

3 comments:

Anonymous said...

:(

mujahidsrilanki said...

அருமமையாக உள்ளது இடைக்கிடைய இஸ்லாத்திற்கு முரண்படும் சில மரபுகளை நீங்கள் சார்ந்துள்ளீர்கள். நல்ல முயற்சி இது எமது இஸ்லாமிய கருத்தாடற் தளம் அதற்கும் வந்து எழுதிட்டு போங்க

http://www.ahlalhdeeth.com/vbe/forumdisplay.php?f=27

வஸ்ஸலாம்

THAMEEM ANSARI said...

ungal thalam nanraaka ullathu

www.thameem1984.spaces.live.com