Thursday, May 26, 2011

மரண அறிவிப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்.

சமையல் அட்டகாசம் ஜலீலாக்காவின் தந்தை  இன்று காலை மரணமடைந்து விட்டார்கள் . [இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.]

உடல் நலம் சரியிலாமல் இருந்து  காலில் ஆப்ரேஷன் செய்திருந்தார்கள். ஹாஸ்பிட்டலில் இருந்து நேற்றைய முன்தினம்தான் வீட்டுக்கு டிச்சார்ஜ் ஆகிபோனவர்கள் இன்று இறந்துவிட்டார்கள்.. அவர்களின் இழப்பு அக்குடும்பத்திற்க்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு. என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்கமுடியாத நிலையில் அவர்கள் மனமிருக்கும். ஆனாலும் இதுபோன்ற இழப்புகளை ஏற்கத்தானே பூமிக்கு வந்துள்ளோம். இதிலிருந்துமட்டும்  யாரும் தப்பிக்கமுடியாது..மண்ணிற்கு வரும் ஒவ்வொரு உயிரும் மீண்டும் மண்ணிற்கு போவது உறுதி இது மான்புடையோன் வகுத்த நியதி.. 

ஜலீலாக்காவின் தந்தைக்காக அவர்களின் மறுமை வாழ்வுக்காவும் . அவர்களின் குடும்பத்தின் மனநிம்மதிக்காவும்அனைவரும் துஆச்செய்யுங்கள். 

யாஅல்லாஹ் நிச்சியமாக நீ மிக்க மன்னிப்பவன். மன்னிப்பதை விரும்புகிறவன். ஆகையால் தந்தையவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த  பிழைகள் யாவற்றையும் நீ மன்னித்து விடுவாயாக!  இறைவா! அவர்களின் பாவங்களை மன்னிதருள்வாயாக! அவர்களுக்கு  நற்பதவியை கொடுத்து சொர்க்கத்தில் நுழைச்செய்து நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!
எங்களின் துவாக்களை யாவற்றையும் ஏற்றுக்கொள்வாயாக.

ஜலீலாக்கா ஊருக்கு கிளம்புகிறார்கள். அவர்களின் பயணம் நல்லபடியாக அமைந்து குடும்பதைகண்டு ஆறுதல் அளித்துவிட்டுவர எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக..காலையில் ஏழுமணிக்கு அக்கா போன்செய்து செய்தியை சொல்வதற்குள் அழுகையின் ஒலி ஓங்கியது மனதை கனகச்செய்துவிட்டது [இதோ கிளம்பப்போகிறோம் ஏர்போட்டுக்கு வழியனுப்ப]  வெளிநாட்டுவாழ்க்கையில் பலதை இழக்கிறோம் அதிலும் இதுபோன்ற மரண நிகழ்வுகளை அறியும்போது நம்   நெஞ்சம் உடைந்து கண்ணீரை அடக்கமுடியாமல் தவிக்கிறோம்..
நமது தவிப்புகளை தீர்ப்பது கண்ணீர்களை துடைப்பதும் இறைவன் வசமே உள்ளது..

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.




அன்பு சகோதரி மளிக்கா அவர்கள் வெளியிட்ட மரண செய்தியை அப்படியே இங்கு பதிந்துள்ளேன்.

நாம் அனைவரும் அன்னாருக்காக துவா செய்வோம்.என் அன்பு மூத்த சகோதரி ஜலீலா அக்கா அவர்களுக்கு இதன் மூலம் என் இரங்கலை தெரிவிப்பதோடு,அல்லாஹ்விடம் இறைஞ்சியவளாக,

பாத்திமா ஜொஹரா. 

Friday, May 13, 2011

குழந்தைகள் கைகளில் மண்ணெண்ணெய் .........

ஜார்கண்ட் மாநிலம் ஹஸாரிபாக் மாவட்டத்தில் 10 x 10 சுற்றளவு கொண்ட, 400 அடி ஆழத்திற்குப் பூமிக்குள் இறங்கிச் சென்று நிலக்கரி எடுக்கப்படுகிறது.

இதற்கு குழந்தை தொழிலார்களை சட்ட விரோதமாக பயன்படுத்துகிறார்கள் அங்குள்ள சுரங்க தொழில் செய்யும் முதலாளிகள்.

இது உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயம் நிறைந்ததாகும். 400 அடி ஆழத்திற்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இந்த சிறுவர், சிறுமிகள் பயணிக்கின்றனர்.

இவர்கள் கைகளில் ஏந்தி செல்வதோ சிறிய 
மண்ணெண்ணெய் விளக்கு மட்டுமே. இவர்கள் அதிகாலையில் உள்ளே நுழைந்து அந்திசாயும் நேரம் வெளியே வருகின்றனர்.

நிலக்கரியை தோண்டி எடுக்க ஒரு கம்பி, தோண்டிய நிலக்கரியை அள்ளிவர ஒரு கூடை இப்படியாக இந்த சிறுவர், சிறுமிகள் கடின உழைப்புக்கு உள்ளாக்கப் படுகின்றனர்.

ஹஸாரிபாக் மாவட்டத்தில் மட்டும் இது போன்று நூற்றுக்கணக்கான நிலக்கரிச் சுரங்கங்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வருகின்றன.

இங்கு ஆயிரக்கணக்கான சிறுவர்களும், சிறுமிகளும், பெண்களும் சுரங்க வேலை என்ற பெயரில் தினந்தோறும் மரணத்தோடு விளையாட வைக்கப்படுகின்றனர்.

இது அம்மாநிலத்தின் அமைச்சர்கள், போலீசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்துதான் இச்சட்டவிரோதச் சுரங்கங்கள் நடந்து வருகின்றன.

அச்சுரங்கங்களில் ஏற்படும் விபத்துக்களை, சிறுவர்களின் மரணங்களைப் பற்றி பதிவு செய்யவும், விசாரிக்கவும் அரசு முன்வருவதேயில்லை. 





 “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்."
THE QURAN 6:151

Tuesday, May 10, 2011

கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன்!இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் வரலாறு. பாகம் 4


நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம். பின்னர் அவ்விரத்தக்கட்டியை மாமிசத்துண்டாகப் படைத்தோம். பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழுமனிதனாக) உருவாக்கினோம்.ஆகவே படைக்கிறவர்களில் மிக அழகானவனான (பெரும் பாக்கியங்களுக்குரிய) அல்லாஹ் உயர்வானவன். (அல்-குர்ஆன் 23:12-14)

இனித் தொடராக வரக்கூடிய குர்ஆனின் வசனங்கள் யாவும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவைகளே. அரபி மொழியில் இருக்கும் வசனங்கள் தான் குர்ஆன் எனப்படும். அதில் தான் நாம் குர்ஆனின் முழுமையான அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் வரும் அலக்عـلـقة) ) எனும் அரபிச் சொல்லுக்கு, அதன் அகராதிப் பொருள்படி,

1) அட்டைப் பூச்சி.

2) தொடுக்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்

3) இரத்தக் கட்டி இந்த அலக் (عـلـقة) நிலையிலுள்ள கருவை அட்டைப் பூச்சி (Leech)- (* The Developing Human, Moore and Persaud 5th ed., P.08.)

மேலும், இந்த அலக் (عـلـقة) என்ற நிலையில் கருவானது தாயின் கருவறையில் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தாயின் இரத்தத்தை உறிஞ்சி தன் வளர்நிலைகளுக்கு சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது. இந்த செயல்பாடு குளத்தில் காணப்படும் அட்டைப் பூச்சியானது பிற பிராணி அல்லது விலங்கினங்களின் தோலின் மேற்பரப்பில் ஒட்டிக் கொண்டு, அந்த பிராணியின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்வதை ஒத்து இருக்கின்றது (*Human Development as Described in the Qur’an and Sunnah, Moore and Others. P.36.) அலக் (عـلـقة) எனும் அரபிப் பதத்திற்கான இரண்டாவது பொருளானது தொட்டுக் கொண்டு அல்லது தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் எனப்படும். தாயின் கர்ப்ப அறையில், கருவின் முதல் ஆரம்ப வளர் நிலையில் எவ்வாறு கரு அமைந்திருக்கும் என்பதையும், அது எவ்வாறு கர்ப்ப அறையில் தொடுத்துக் கொண்டிருக்கின்றது மேலும் அலக் (عـلـقة) எனும் பதத்திற்கான மூன்றாவது பொருளாக இரத்தக் கட்டி எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. கருவின் ஆரம்ப வளர்நிலையில் அதை நோக்குவோமானால், அதன் புறத் தோற்றமும் அதை மூடி இருக்கும் பை போன்ற சவ்வுத் தோற்றமும், உறைந்த நிலையில் உள்ள இரத்தக் கட்டி போன்ற அமைப்புடன் இருப்பதை காண முடியும். கருவின் ஆரம்ப நிலையில் அதிகப்படியான இரத்த ஓட்டம் கருவின் மீது பாய்ச்சப்படுவதால், அதன் புறத் தோற்றம் உறைந்த நிலையிலுள்ள இரத்தக் கட்டி போன்று தோற்றமளிக்கின்றது. (Human Development as Described in the Qur’an and sunnah, Moore and Others., Page.37-38).

மேலும் கருவின் வளர்நிலையில் அதனது மூன்றாவது வாரம் வரை இரத்த ஓட்டச் சுழற்சி செயல்படாதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.(The Developing Human, Moore and Persuad, 5th ed., P.65).

மேற்கண்ட அலக் (عـلـقة) எனும் அரபிப்பதத்திற்கான மூன்று அர்த்தங்களுமே அது தரும் பொருள்களுக்கான விளக்கத்திற்கு எந்த வித மாறுபாடும் இல்லாமல் ஒத்திருப்பதை நாம் காண முடிகின்றது.

கருவின் அடுத்த வளர்நிலையாக முல்கதன் (مضغة) எனும் அரபிப்பதத்தைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. முல்கதன்(مضغة) எனும் சொல்லுக்கு அரபி அகராதியானது பற்களால் மென்று துப்பிய பொருள் (Chewed-like substance) சூவிங்கம் மிட்டாயைக் கடித்து மென்று துப்பும் போது, அதில் பற்களின் வரிகள் பட்டு எவ்வாறு தோற்றம் தருமோ அது போலத் தோற்றத்தை, முத்கா நிலையில் உள்ள கரு தோற்றம் தரும். இது கரு வளர்நிலையில் 28-வது நாளில் தெளிவாகக் காணப்படும். மேலும் பற்களின் வரிகள் போன்ற அமைப்பையும் கருவின் முதுகுப் புறத்தில் தெளிவாகக் காணலாம். The Developing Human, Moore and Persuad, 5th ed., P.8. அறிவியல் என்ற துறை இருப்பதையே அறியாத அந்தக் காலத்தில், இன்று இருப்பது போல எக்ஸ்-ரே கருவிகள், CT ஸ்கேன் கருவிகள், நுண் பெருக்கிகள் (Microscope), போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளே இல்லாத, அவற்றை எண்ணிக் கூடப் பார்க்க இயலாத 1400 ஆண்டுகளுக்கு முன் உள்ள சமூகத்தில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு இணையான அறிவியல் கூற்றுக்கு முற்றும் மாற்றமில்லாத வகையில் எவ்வாறு இவ்வளவு தெளிவான முறையில் கரு வளர்ச்சியைப் பற்றிக் கூற முடிந்தது!!!

கி.பி. 1677-ல் தான் ஆணின் விந்தில் உள்ள ஸ்பெர்மெடோஸோவா ((Spermatazoa) எனும் விந்தணுச் செல்லை உருப்பெருக்கி (Miroscope) மூலம் ஹாம் மற்றும் லீயுவென்ஹேக் எனும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். இவர்கள் வாழ்ந்த அந்தக் காலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தை விட 1000 ஆண்டுகள் பிந்தைய காலமாகும் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இவர்கள் விந்தணுவைக் குறித்து ஆய்வு செய்த போது, விந்தணுவில் இருக்கும் மனிதனின் மாதிரித் தோற்றம் தான், பெண்ணின் கருப்பையை அடைந்து, வளர்கிறது எனும் (தவறான) கொள்கையை அன்றைய மக்கள் கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. The Developing Human, Moore and Persuad, 5th ed., P.௯

உடற்கூறு இயல் (Anatomy), கருவியல் (Embryology) ஆகிய மருத்துவத் துறையில் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும் இவற்றில் முனைவர் (P.hd.) பட்டங்களும் பெற்றுள்ள டாக்டர் எமிரிடஸ் கீத் L. மூர் என்பவர் 'மனிதனின் வளர்நிலைகள்' (The Developing Human) எனும் ஆய்வு நூலை எழுதி உள்ளார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 8 வெவ்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் எழுதிய இந்த அறிவியல் பூர்வமான ஆய்வானது, தனிப்பட்ட ஒருவரால் ஆய்வு செய்து எழுதப்பட்ட சிறந்த நூலாக, அமெரிக்காவில் உள்ள இதற்கான சிறப்பு ஆய்வுக் குழுவில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும், மருத்துவத் துறைப்பிரிவில் அடிப்படை அறிவியல் (Basic Science) பிரிவில் உதவித் தலைவராகவும், உடற்கூறு இயல் (Anatomy) துறையில் 8 ஆண்டுகள் சேர்மனாகவும் பணிபுரிந்துள்ளார். 1984-ல் கனடாவின் உடற்கூறு இயல் துறை அசோஸியேஸனின் சிறப்பு விருதான J.C.B.விருதை, டாக்டர். கீத் மூர் அவர்களின் உடற்கூறு இயல் ஆய்வுக்கான சிறப்பு விருதாக வழங்கி கவுரவிதிதுள்ளது. உலக அளவில் பல்வேறு அஸோஸியேஸன்களையும் குறிப்பாக அமெரிக்க மற்றும் கனடாவின் உடற்கூறு இயல் மற்றும் பல்வேறு ஆய்வுப் பிரிவுக் கவுன்சில்களையும் வழி நடத்திச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு.

1981-ல் சௌதி அரேபியாவின் தம்மாம் (Dammam) நகரில் நடைபெற்ற 7-வது மருத்தவ கருத்தரங்கில் டாக்டர்.கீத் மூர் அவர்கள் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனிதனுடைய கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன் கொண்டுள்ள கருத்துக்களை ஆய்வு செய்து உதவுவதில் நான் பெருமைப்படுகின்றேன் என்றார்.

மேலும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த அறிவியல் கருத்துக்கள் கொண்ட வசனங்களை கடவுளிடம் இருந்து தான் முஹம்மது அவர்கள் பெற்றிருக்க முடியும். ஏனெனில், அவர்கள் வாழ்ந்து, மறைந்து பன்னெடுங்காலம் வரையும் இதற்கான அறிவும் ஆய்வும் நடைபெறவில்லை. மாறாக, மிக நீண்ட காலத்திற்குப் பின்பே இந்த ஆய்வுகள் யாவும் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளின் மூலமாக முஹம்மது அவர்கள் இறைவனின் திருத்தூதர் தான் என்பதை உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மேற்கண்ட ஆய்வுகளின் மூலம் குர்ஆனானது இறைவனின் வேதம் தான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? எனக் கேட்ட பொழுது இதில் எனக்கு எந்த சிரமமும்ல்லை எனப் பதில் கூறினார்.

மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனித கரு வளர்ச்சியானது பல தொகுதிகளைக் கொண்ட மிகவும் சிக்கலான, இடைவிடாத தொடர்ச்சியான பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வளர்நிலைகளைக் கொண்டது. இந்த வளர்நிலைத் தொடர் மாற்றங்களை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் மணிமொழி (ஹதீஸ்) களைப் பயன்படுத்தி தனித் தனிப் பிரிவுகளாக அல்லது நிலைகளாக பிரித்தறிவதற்கான புதிய முறைகளை ஏற்படுத்த முடிந்துள்ளது. (இது நவீன விஞ்ஞானத்தற்கு குர்ஆன் வழங்கியுள்ள பேருதவியாகும் - ஆசிரியர்) இந்த புதிய முறையானது இலகுவானதாகவும், விரிவானதாகவும், இன்றைய அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்புடையதாகவும் அமைந்துள்ளது. 7-ஆம் நூற்றாண்டின் போது வாழ்ந்த அண்ணலார் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கிய குர்ஆனையும் அவர்களது போதனை (ஹதீஸ்) களையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியதன் விளைவாக, மனிதனின் கருவளர்ச்சியின் நிலைகளைப் பற்றிய அறிவை இன்றைய நவீன அறிவியல் உலகத்திற்கு தெளிவுபடுத்த முடிந்துள்ளது என்பது மிகவும் ஆச்சரியமானதே!!! என்று குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும் அவர் பேசும் போது: கரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி கோழி முட்டையில் தம் ஆய்வை நிகழ்த்தி, இன்றுள்ள அறிவியல் உலகிற்கு கரு வளர்ச்சி பற்றிய முதன் முதல் அறிவை வழங்கியவர் அரிஸ்டாட்டில் என்ற அறிவியலாளர் தான். ஆனால் அவர் கூட குர்ஆன் கூறிய அளவிற்கு கருவின் பல வளர்நிலைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. எனக்குத் தெரிந்த வரை, இந்த 20-ம் நூற்றாண்டில் தான் மனிதனின் கருவின் வளர்நிலைகளைப் பற்றிய அறிவியல் அறிவை சிறிதளவே விஞ்ஞானிகள் பெற்றிருந்தனர். இதன் மூலம் குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் (குர்ஆனிய வசனங்கள்) யாவும், அது 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதிலிருந்து, திருமறைக் குர்ஆன் கொண்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் யாவும் மனிதனின் அறிவு சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது. மேலும், திருமறைக் குர்ஆனானது இறைவன் அவனது திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் தான் என்ற ஒரே இறுதி முடிவுக்குத் தான் நம்மால் வர இயலுகின்றது. ஏனெனில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத, எந்த அறிவியல் பயிற்சியும் பெற்றிராத முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய அறிவியலுக்கு முரண்படாத கருத்துக்களை பெற்றிருந்திருப்பார்கள் என்பதை நம்மால் கூற இயலாது.

Sunday, May 1, 2011

கொல்லத் துணிந்தாலும்.........

தமிழன் என்ற பெயரில் ஒருவர் எனக்கு பல மிரட்டல்கள்,வசவுகள்,இன்னும் பல நிந்தனை செய்யும் சிந்தனைகளை கமெண்ட் எனும் பெயரில் வாரி இறைத்துள்ளார்.(ஒன்றைத் தவிர ஏனையதை நீக்கிவிட்டேன்)அவர்க்கு மிக்க நன்றி.இதனைக் கண்டு கொதித்துப் போய் - விசாரித்து கமென்ட் கொடுத்த உள்ளங்களுக்கும் நன்றி.

நான் இதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை.காரணம்,உண்மையை சொல்வது நம் கடமை.இறைவனால் ஏற்றுக்கொளப்பட்ட ஒரே மார்க்கமான இஸ்லாத்தை பின்பற்றி,கல்லையும்,மண்ணையும்,செடி-கொடிகளையும்,விலங்குகளையும் இன்னும் கண்டதையும் வணங்கக்கூடாது என எத்தி வைத்து - உலக மக்கள் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்ற செய்தியை சொல்ல நாம் கடமைப் பட்டுள்ளோம்.நாம் மட்டும் சொர்க்கம் போனால் போதுமா?

கல்லை வணங்கிக் கொண்டு இருக்கும் இந்து சகோதர-சகோதரிகள் அந்த நிலைமையிலேயே மரணித்துவிட்டால்?அவர்கள் நரகம் அல்லவா செல்ல நேரும்?அந்த கல்லை படைத்த இறைவனை வணங்குவதை விட்டு விட்டு - அந்தக் கல்லை வணங்கினால்,அது எவ்வளவு மாபாதகம்?

இறைவனுக்கு மகன் உண்டு என சொல்லிக் கொண்டு - இறைவனுக்கு மாசு கற்பிக்கும் கிறிஸ்த சகோதர சகோதரிகள் அந்த நிலையிலேய மரணித்துவிட்டால் அவர்கள் கதி என்ன?நரகம் அல்லவா செல்ல நேரும்?

எனவே,இறைவனால் படைக்கப்பட்டவைகளை வணங்க மாட்டோம்,மாறாக,அவைகளை படைத்த ஏக இறைவனையே வணங்குவோம்.இந்த செய்தியை சகோதரர் தமிழன் போன்றோர் உணரவேண்டும்.அவர்கள் நம்மை வசை பாடினாலும்,ஏன் கொல்லத் துணிந்தாலும் நாம் கவலைப்படமாட்டோம்.அவர்களும் சொர்க்கம் செல்ல வேண்டும்,நரகில் சென்று வதைபடக் கூடாது.

எனவே,என் அருமை சகோதர சகோதரிகளே - நாம் அதைப் பற்றியெலாம் கவலைகொள்ளாமல் - நாம் எத்தி வைப்போம் உண்மை செய்தியை.

Sunday, April 17, 2011

இனியாவது இந்த நரேந்திர மோடிக்கள் திருந்துகிறார்களா எனப் பார்ப்போம்.

திருப்பூர் அருகே பூலுவப்பட்டியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஆறுமுகம் (55). இவரது மகள் மீனாட்சி (18) குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.

பள்ளி விடுமுறையை கொண்டாட, பல்லடம் மேட்டுக்கடையில் உள்ள தன் அக்கா ப்ரியா வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் அருகில் உள்ள தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்ற மீனாட்சி ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால், மாலை 4 மணி அளவில் அங்குள்ள கிணற்றில் மீனாட்சி பிணமாக மிதப்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர்.

தீயணைப்பு துறையினர் உதவியோடு மீனாட்சி பிரேதத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பிரேத பரிசோதனைக்காக சவக் கிடங்கில் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று காலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர் மற்றும் ஊழியர்கள் வந்தனர். அப்போது மீனாட்சியின் இரு மார்பகங்களும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தன. மேலும் அவை மாயமாகியிருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தந்கனர்.

இது குறித்து தகவலறிந்த மீனாட்சியின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பல்லடம் டி.எஸ்.பி. தங்கதுரை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியததை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.

இதனையடுத்து, மீனாட்சியின் பிரேதம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவுப் பணியில் இருந்த பல்லடம் மருத்துவமனை டாக்டர்கள், சவக் கிடங்கு ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவிக்கு நேரந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேற்கண்ட செய்தியை நாளிதழ்களில் வாசித்தவுடன் நெஞ்சம் குமுறியது.கண்கள் அடைத்துக் கொண்டன.அடப் பாவிகளா,வன்முறைக்கும் ஒரு வரம்பில்லையா?

இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக.

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஒரு கர்ப்பவதியான முஸ்லிம் பெண்ணை கற்பழித்துவிட்டு,  பெரிய சூலாயுதத்தால் அந்த பெண்ணின் வயிற்ரை கிழித்து - வயிற்றினில் இருந்த அந்த பிஞ்சு சிசுவை வெளியே எடுத்து தூக்கி வீசி 
எறிந்ததை 
மறக்க முடியாது.

இவைகள் எல்லாம் நடப்பது நம் இந்திய திரு நாட்டில்தான்.இங்குதான் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் புள்ளி விவரப்படி உலகில் மிக அதிக அளவில் பெண்களுக்கான குற்றங்கள் நடப்பது இந்தியாவில்தான் என்கிறது.

இனியாவது இந்த நரேந்திர மோடிக்கள் திருந்துகிறார்களா எனப் பார்ப்போம்.

Sunday, April 10, 2011

உண்மை ஜனநாயகம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

நபிகள் நாயகம் 


Sunday, April 3, 2011

தேர்தல் கல கல,

ஒரு ஊர்ல ஒரு விஷமம் புடிச்சவன் இருந்தானாம்.அவனோட வேலை எல்லாரையும் வம்பிக்கிழுத்து சண்ட மூட்டிவிட்டு பிரச்சனை உண்டு பண்ணுவதுதான்.அந்த நேரத்துலஅந்த விஷமம் புடிச்சவன் நைசா நழுவிடுவான்.


அப்பிடித்தான் ஒரு நாலு,இன்னிக்கி என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்குட்டு இருந்தப்போ இப்பிடி ஒரு யோசனை தோணிச்சு.

உடனே மக்கள் நெறஞ்ச மார்கெட்டுக்கு போயி,ஒரு மிட்டாய் வாங்கினான்.அந்த மிட்டாயில பாதியை தின்னுட்டு,ஒரு கண்ணாடி கோப்பைகள்,கண்ணாடி பீங்கான்கள் விக்கிற கடைக்கு 
போயி சாதூர்யமான முறையில அந்த மிச்சம் இருந்த மிட்டாயை ஒரு கண்ணாடி கோப்பையில ஓட்டிவிட்டு,கொஞ்ச தூர போயி நின்னு என்னதான் நடக்குதுன்னு நோட்டமிட்டுக்குட்டு இருந்தான்.

இந்த நேரத்துல அந்த கண்ணாடிக் கடையில இருக்குற மிட்டாயை திங்க ஒரு ஈ வந்துது.அந்த மிட்டாய் மேல உக்காந்து தின்ன ஆரம்பிச்சது.அப்போ ஒரு பல்லி இந்த ஈய பாத்துட்டு - மெது மெதுவா நகர்ந்து வர,இப்போ ஈ பல்லிக்கு போக்கு காட்ட,இப்பிடியே போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு பூனை அந்த பக்கம் வர,அது பல்லியை பாத்துட்டு - ஆஹா நல்ல சந்தர்ப்பம் டோயின்னு ஒரே தாவு தாவ -பல்லி லபக்குன்னு காணாம போக - அந்த பூனை அங்கன இருந்த கண்ணாடி பாத்திரங்களைஎல்லாம் உடைக்க - பூனையோட மொதலாளி எங்க நம்ம பூனையாரை காணோம்னு அந்தக்கடைக்கு வர,இத பார்த்த - கண்ணாடி கடை மொதலாளிக்கு அட இவன் பூனைதான் இதுன்னு தெரிய - கோபம் தலைக்கு ஏறி - இப்போ ரெண்டு பேருக்கும் குடுமிப்பிடி சண்டை.

இதுல மிச்சம் இருந்த கண்ணாடியும் உடைஞ்சு போயி,பூனையோட மொதலாளியோட பல்லும் உடைஞ்சு -கிளைமாக்ஸா போலிசு வந்து- அப்பப்பா இனியும் சொல்லனுமா?

அந்த விஷமக்கார நம்மாளு ,ரகசியமா - சிரிச்சுக்குட்டு இருந்தான்,முழு திருப்தியோட.

அப்பாடா,இந்த தேர்தல பத்தி - அவிங்க தேர்தல் அறிக்கை பத்தி - பிரச்சாரம் பத்தி படிக்கும்போது எனக்கு மேற்கண்ட கற்பனை வந்துது,கொட்டிபுட்டேன்,அவ்வளவுதான்.(நீங்க அந்த விஷமக்கார ஆளு யாருன்னு கருணாநிதி,ஜெயலலிதா,இப்பிடி இன்னும் யாரைப்பத்தியும் கற்பனை பண்ணாலும் நான் பொறுப்பல்ல)

Tuesday, March 8, 2011

பகிரங்க எச்சரிக்கை


வலைப்பூக்களின் பின்னூட்டங்கள் வழியே அறிமுகமாகி, பின் தொடர்ந்து, இணையக் குழுக்களில் விவாதித்து, அரட்டைப் பெட்டிகளில் பேசிக் கொள்வதுதான் வலைப்பூ நட்பின் பரிமாணம். சமூக வலைத்தளங்களில் வியாபித்திருக்கும் போலித்தன்மைக்கு அஞ்சுவோர் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்.

இங்கு கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள முடிவதுடன் எழுதும் திறனை மெருகேற்றிக் கொள்ள முடிகிறது. நமக்கென 
ஒரு தளம் என்கிற உணர்வும், நம்மைப் பின்தொடரும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற பெருமிதமும்தான் வலைப் பதிவர்களை தொடர்ந்து எழுதச் செய்கின்றன.

ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல் சேவை வழங்குவோர் என அனைவருமே இதுபோன்ற அரட்டைப்பெட்டி வசதியை வழங்குகின்றனர். நட்பைத் தேடுவோர் முதலில் சங்கமிக்கும் இடம் சமூக வலைத்தளங்கள்தான். ஆனால் இந்த நட்பில் நம்பகத்தன்மை இருப்பதில்லை. எச்சரிக்கை உணர்வுடனேயே எல்லோரையும் அணுக வேண்டும். இவற்றில் பரிமாறிக்கொள்ளப்படும் கருத்துகளில் பெரும்பகுதி எந்த நோக்கமும் இல்லாதவை. அவற்றிலும் உண்மையானவை மிகச் சொற்பமே. பெண்களையும், குழந்தைகளையும் பிடிப்பதற்காகவே பலர் வலைவிரித்திருப்பார்கள். தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களின் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தி மோசடி செய்யவும் வழியுண்டு.

சமூக வலைத்தளம் என்பது பொதுவெளி. குழு விவாதமும் அதுபோலத்தான். பொது இடத்தில் எந்த அளவுக்கு நாகரிகமாகவும் பாதுகாப்பாகவும் நடந்து கொள்வோமோ அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் இயங்க வேண்டும். ஆனால், இந்தத் தெளிவும் முதிர்ச்சியும் அனைவருக்கும் இருப்பதில்லை. ஐந்தாம் வகுப்பு மாணவியும் ஆறாம் வகுப்பு மாணவனும் சமூக வலைத்தளங்களில் நட்பு கொள்கிறார்கள். அரசம்பட்டி அரசுப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர்கள் குழு என்பதுபோல இவர்களுக்குள் குழுக்களும் உண்டு. குழந்தைகளின் இணைய நடவடிக்கையைக் கண்காணிப்பது குறித்து பெற்றோருக்கு இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படாத நிலையில், இந்தக் குழந்தைகள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் மணமகன் அல்லது மணமகளைக் கண்காணிக்கும் போக்கும் அதிகரித்திருக்கிறது. பெண்ணுக்கு நட்பு வட்டம் எப்படி இருக்கிறது, யாருடன் நெருக்கமாகப் பழகுகிறார் என்பதையெல்லாம் பிள்ளைவீட்டார் கண்காணிக்கிறார்கள். பெண்வீட்டாரும் இதைத்தான் செய்கிறார்கள். இந்தக் கண்காணிப்பால் திருமணம் நின்றுபோன விநோதங்கள்கூட உண்டு. எல்லாம் தமிழ்நாட்டில்தான்.

சமூக வலைத்தளங்களில் எல்லோராலும் நம்மைக் கண்காணிக்க முடியும் என்பதே அவற்றைப் பயன்படுத்தும் பலருக்குத் தெரியாது. இதுதான் மோசடிகள் நடப்பதற்கும், அந்தரங்கங்கள் வெளியாவதற்கும் முக்கிய காரணம். இணைய அரட்டையிலும் இந்த அளவுக்கு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஜிமெயில் சேவையில் நமது அரட்டைகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வரும் என்பதையும் பலர் அறிந்திருக்கவில்லை. அப்படிப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கும் வசதி இருந்தாலும், அதைப் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. அப்படியே தடுத்தாலும் வேறு வகையில் அதை ஆவணப்படுத்த முடியும்.
 பாதுகாப்பானது, ரகசியமானது என்பது போன்ற தோற்றம் இணைய அரட்டைக்கு இருக்கிறது. உண்மையில் அது முழுக்க முழுக்க பொய்யே. என்னதான் உங்களது மின்னஞ்சல் கணக்கை நீங்கள் கடவுச் சொல் போட்டுப் பூட்டியிருந்தாலும் கள்ளச்சாவிகள் போட்டு அதைத் திறந்து பார்ப்பதையே தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் தொழில்நுட்பத்தில் தேர்ந்த திருடர்கள். உங்கள் பாதுகாப்புக்காக வீட்டுச் சுற்றுச் சுவரை 8 அடிக்கு உயர்த்தினீர்கள் என்றால், தொழில்நுட்பத் திருடர்களால் 12 அடிக்கு ஏணி தயாரிக்க முடிகிறது. இதுதான் இன்றையத் தொழில்நுட்பத்தின் உண்மையான முகம்.

 இந்தத் தொழில்நுட்பம் நம்மை எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடலாம். இணையத்தில் கிடைக்கும் பிணைப்பற்ற நட்பு எந்த நேரத்திலும் துரோகம் இழைக்கலாம். பிரபலமாக வேண்டும், நட்பு வட்டத்தை விரிவாக்க வேண்டும் என்கிற ஆசையில் சமூக வலைத்தளங்களில் சொந்த விஷயங்களை எழுதுவதும், குடும்ப புகைப்படத் தொகுப்புகளை வெளியிடுவதும் ஆபத்தை விளைவிக்கும். வலைப்பூக்களில் எழுதும்போதும் இதே எச்சரிக்கை 
உணர்வு அவசியம். தற்கால தொழில்நுட்பத்தையும் இணைய நட்பையும் நம்பி அரட்டைகளில் அந்தரங்கங்களைப் பகிர்ந்துகொள்வது நல்லதல்ல. நமக்கு ஆதரவான தொழில்நுட்பம் எந்த நேரத்திலும் நமக்கு எதிராகவும் திரும்பக்கூடும். எச்சரிக்கையாக இயங்காவிட்டால் முடங்கிப் போகவேண்டியதுதான்.
 

அற்புதப் படைப்பாளன்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!

சென்னையில் இயங்கி வரும்  'இக்ராமுல் முஸ்லிமீன் சாரிட்டபில் டிரஸ்ட்' எனும் அமைப்பின்  சார்பாக, "அற்புதப் படைப்பாளன்" - இப்பிரபஞ்சத்தின் இறைவன் பற்றிய கருத்தரங்க நிகழ்ச்சியை வரும்13/03/2011 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடத்த உள்ளோம் - இன்ஷா அல்லாஹ்.

நிகழ்ச்சியில்:- 
  1. சகோ. முஹிப்புல்லாஹ் (முன்னாள் புத்த பீட்சு - சுவாமி ஆனந்தாஜி),
  2. சகோ.  M. C. முஹம்மது (முன்னாள் கிருத்துவ போதகர் - கிருஸ்து ராஜா),
  3. சகோ. அஹமது ஸுஃப்யான், ஆகியோர் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்துகின்றனர் மற்றும்
  4. டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) &
  5. முஃப்தி உமர் ஷெரிஃப் ஆகியோர் சிறப்புரையாற்றவிருக்கின்றனர்.
இடம்: மைசூர் மஹால்,
முகவரி : 169 எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை
சர்மா நகர், வியாசர்பாடி, சென்னை 39
தொடர்புக்கு : +91-9176633023/9841053468/9841174223
பஸ ரூட்: 37E, 38H, 57, 57D, 57F, 57H, 58H, 64C, 138A, 164, 557, 558, 559, 592, 593

பகல் 1:30க்கு 
விருந்தினர்களுக்குப் பகலுணவு பரிமாறப் படும்.
இந்நிகழ்ச்சியின் நோக்கம் பிறமத சகோதர, சகோதரிகளுக்கிடையே காணப்படும் இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதல்களையும் (கண்ணோட்டங்களையும்) அகற்றுவதோடு, இஸ்லாம் பற்றிய அவர்களது சந்தேகங்களுக்கு மார்க்க அறிஞர்களைக் கொண்டு விளக்கமும் கொடுத்து, அதன் முலம் அவர்களிடையே தூய தஃவா எனும் அழைப்புப்பணியை மேற்கொள்வதேயாகும்.
சகோதர, சகோதரிகளே! சென்னையைச் சேர்ந்த,  தங்களுக்குத் தெரிந்த/அறிமுகமான, இஸ்லாத்தை அறிந்து கொள்ள நினைக்கும் பிறமத சகோதர, சகோதரிகளை இந்நிகழ்ச்சிக்கு அனுப்பி வையுங்கள். அல்லது எங்களுக்கு அவர்களின் முகவரி அல்லது மொபைல் எண் கொடுத்தால் அவர்களை நாங்கள் சந்தித்து / தொடர்பு கொண்டு அழைப்பிதழ் கொடுத்து வரவழைக்கின்றோம். பலர் இஸ்லாத்தை தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் ஆனால் அவர்களுக்குச் சரியான தருணங்கள், விளக்கங்கள் கிடைப்பதில்லை.

எனவே இதுபோன்ற நிகழ்ச்சி அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையலாம்.  மாற்றார்களை இஸ்லாத்தின் பக்கம் வர தஃவாச் செய்வது நமது கடமை; அதன் மூலம் அவர்களுக்கு ஹிதாயத் தருவது இறைவனின் உரிமை.
மேலும் தகவலுக்கு +91-91766 33023 - என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன் சகோதரன்,
ஹைதர் ஹுசேன்

இக்ராமுல் முஸ்லிமீன் சாரிட்டபுல் டிரஸ்ட்
Ikramul Muslimeen Charitable Trust
71/11 Bose Cross Street,
Krishnamoorthi Nagar,
Kaviarasy Kannadasan Nagar,
Chennai 600 118
Tel : 9841053468/9841174223

தகவல் : பரங்கிப்பேட்டை கலீல் பாக்கவீ, குவைத்.