Thursday, September 24, 2009

பெருங்கொடுமைங்க இது!

தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த 25 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயுமான ஒரு பெண்ணை பழிவாங்கும் நடவடிக்கையாக நால்வர் சேர்ந்து வன்புணர்ந்து கொலை செய்த கொடூரச் சம்பவம் மும்பையில் நேற்று நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரில் மூவர் உடன் பிறந்த சகோதரர்களும் இவர்கள் இறந்த பெண்ணின் தூரத்து உறவு முறை யும் ஆவார்கள். மற்றொருவர் அவர்களின் நண்பராவார். இவர்கள் நால்வரும் சேர்ந்து இக்கொலையை அனடாப் ஹில்லில் உள்ள ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று அப்பெண்ணை வன்புணர்ந்து மண்ணெண்னை ஊற்றி எரித்துள்ளனர். கடுமையான தீக்காயங்களுடன் நேற்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக அப்பெண்ணின் வாக்குமூலத்தின்படி ராஜேஷ் தேவேந்திரா(30), குமார் தேவேந்திரா(28), நித்யா தேவேந்திரா(25) ஆகிய மூவரும் (உடன் பிறந்த சகோதரர்கள்) அவர்களின் நண்பர் சங்கர் முதலியார்(35) உள்பட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை உயர் அதிகாரி கூறினார்.மேலும் இது சில வருடங்களுக்கு முன் இப்பெண் நித்யாதேவந்திராவை திருமணம் செய்ய மறுத்துவிட்டபடியால் ஆத்திரமடைந்த இச்சகோதரர்கள் திட்டமிட்டே இதை செய்திருப்பதாக அப்பெண்ணின் உறவினர் கிருஷ்ணா ரெட்டி கூறினார்
----------------------------------------------

இந்தியாவின் பிசினஸ் கேபிடல்லில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.இது வெளியில் தெரிந்த செய்தி,ஆனால் தெரியாமல் எத்தனயோ உண்டு.அவைகள் எல்லாத்தையும் மேல் சாதி இந்துக்களும்,அரசியல்வாதிகளும் மறைத்துவிடுகின்றனர்.பெண்களுக்கு எதிரான கொடுமை இந்தியாவில் தான் அதிகம் நடக்கின்றன என்றும்,அரபு நாடுகளில் மிக மிக குறைந்த அளவில் நடப்பதாகவும் ஐ நா அறிக்கை கூறுகிறது.ஒரு முறை மத்திய உள்துறை மந்திரியாக இருந்த எல்.கே.அத்வானி சொன்னமாதிரி,"இதே போன்ற செயல்களுக்கு,இஸ்லாம் சொல்கிற மாதிரி - மரண தண்டனை கொடுத்தால்தான் இந்தியாவில் குற்றம் மறையும்".
சிந்திப்பார்களா,அல்லாஹ்வின் சட்டம்தான் அனைத்துக்கும் தீர்வும்,நன்மையும் என்று!

8 comments:

Anonymous said...

உண்மைதான்.இதேபோன்ற கொடுமைகள் இந்தியாவெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.பாத்திமா நல்லா படம் பிடிச்சி காட்டி இருக்கீங்க.

கண்ணகி ராஜதுரை

peacetrain said...

மேல் சாதி இந்துக்கள் என்று மட்டும் சொல்வது சரியில்லை.ஏன் மற்ற சாதி மக்களிடமும்,மற்ற மத மக்களிடமும் இல்லை என்று சொல்ல முடியுமா?இது போன்ற செயலகள் சில சமூக மக்களிடம் கூடுதலாகவும்,சில சமூக மக்களிடம் குறைவாகவும் இருப்பதற்கு காரணம் அவர்களிடம் இறைவன் குறித்த பயம் இல்லாமல் இருப்பதே காரணம்.மற்ற மக்களைவிட முஸ்லிம்கள் இறைவன் மேல் முழு நம்பிக்கையும்,அவன் கருணை எப்படி அளப்பரிதோ,அதே போன்று அவன் தண்டிப்பதிலும் வல்லவன் என்பதயும் நம்புகிறார்கள்.அதனால்,முஸ்லிம்களிடம் பொதுவாகவே கெட்ட செயல் மிக அரிது,மற்ற மக்களிடம் உள்ளத்தைக் காட்டிலும்.

அப்துல்மாலிக் said...

தெளிவா தோலுரித்துக்காட்டிவிட்டீர்கள் தொடருங்கள் சமுதாய பணியை

Anonymous said...

excellent work.keep it up.
santhosh mohan

பாத்திமா ஜொஹ்ரா said...

சிலர் ஆச்சரியப்படலாம்,அல்லது ஆதங்கப்படலாம்,ஏன் நம்மோட கமென்ட் வரவில்லை என்று.நல்ல கருத்து கண்டிப்பாக இடம்பெறும்.ஆனால் ஒருவரை ஒருவர் தாக்கி,மற்ற சமுதாயத்தைச் தாங்கி வரும் எந்த கருத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியாது.இந்து மதத்தில் உள்ள குறைகளை ஒருவர் சுட்டிக் காட்டி எழுதி இருந்தார்.அவர்க்கு நான் சொல்வது இதுதான்,"எத்தனை இந்து சகோதரிகளுக்கு,சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் ஏகத்துவ செய்தியை நீங்கள் கொண்டு சென்றுள்ளீர்கள் "இப்போதைக்கு இது போதும்.

THAMEEM ANSARI said...

assalamu alaikkum

Anonymous said...

assalamu alaikkum

Anonymous said...

assalmu alikum keep it up i proud of u