Monday, June 7, 2010

துலுக்க வீட்டு சாப்பாடு....?

என்னோட பிரண்டு ஒருத்தி,பேரு வாசுகி போன வாரம் என் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னால்.ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி.சரி அவளுக்கு பிடிச்ச மாதிரி சமக்கனுமே,என்ன பண்றது?அவ ............. அதுனால காய்கறி பிரியாணி,கத்தரிக்காய் கூட்டு,உருளை பொரியல்,இப்படி செஞ்சு இருந்தேன்.

அவளுக்கு பிடிக்கணுமே என்று கவலையா இருந்தது.அவளும் வந்தாச்சி.வந்ததுமே என்னை கட்டி அணைத்துக்கொண்டவள்,சொன்னால்,"துலுக்க வீட்டு சாப்பாடு ஒரு வெட்டு வெட்ட வேண்டியதுதான்."
"வா வந்து உட்கார்.நானும் ஆசையாசையா காய்கறி பிரியாணியை தட்டுல போட்ட வுடனே  கேட்டாள்,'என்ன இது எங்க ஆத்து சமையல் மாதிரி பண்ணியிருக்கே,துல்லுக்க வீட்டுல சாப்பாடுன்னா ஆட்டுக்கறி,கோழிக்கறி கிடைக்கும்னு நினச்சு வந்தேன்" என்றாலே பார்க்கலாம்.

கேட்டேன்,ஏன் அப்பிடின்னு,அதுக்கு சொன்னாள்,ஒரே காய்கறி தின்னு தின்னு சலிச்சு போச்சு,கறி,கோழின்னு வீட்டுக்கு தெரியாம ஹோட்டல் போய் ஒரு வெட்டு வெட்டி அந்த டேஸ்ட்டு புடிச்சிபோய்......."

"சாரி சொல்லிக்கொண்டேன்,அடுத்த வாரம் ஆட்டு பிரியாணி செஞ்சுட்டா போச்சு "என்று சொன்னதை அன்பாக பார்த்தால்.அதோடு இன்னும் சொன்னேன்,"பாய்மாருங்க குடும்பத்துல ஒரே கறி சாப்பாடுத்தான்னு தப்பா நினைச்சுக்காதே,இறைவன் எதுவெல்லாம் சாப்பிட அனுமதி கொடுத்துள்ளானோ அதையெல்லாம் சாப்பிடுவோம்,எதையெல்லாம் வேண்டாமெண்டு சொல்லியுல்லானோ அதை நாங்க சாப்பிடமாட்டோம்.
அது போல நீ துலுக்க என்ற பயன்படுத்துற அந்த சொல் முஸ்லிம்களைக் குறிக்காது.அது துருக்கி நாட்டையே குறிக்கும்.முன்னால முஸ்லிம்களின் கிலாபா என்ற தலைமை துருக்கியில இருந்ததால எல்லா முஸ்லிம்களையும் துருக்கர் என்று அழைக்கலாயினர்,(இந்தியாவில் மட்டும்)அது தவறு."என்றேன் அன்பாக.

'சாரி "சொன்னாள்.

அடுத்த வாரம் சிந்திப்போம் என்று விடை பெற்றுக்கொண்டோம்.


நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதொ அதுவுமேயாகும் ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
திருக்குர்ஆன் 16:115

Saturday, May 29, 2010

தவிச்சுப்போன சுல்தானின் மனசு படித்தேன்,பகிர்ந்தேன்!

சுல்தானின் மனசு துடித்தது எதற்காக ? அந்த துடிப்பு என் மனசுக்குள்ளும்.எத்தனையோ ஆயிரம் நபர்களை பார்க்கிறோம,பழகுகிறோம்.ஆனால் எத்தனை பேரிடம் இறைவனால் அங்கீகரிகப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாத்தை எடுத்து சொல்லி இருக்கிறோம்.நாம் மட்டும் சொர்க்கம் போனால் போதுமா?அவர்களை நரகத்தில் விட்டு விட்டு ...... இல்லை ....இல்லை வேணாம் வேண்டவே வேண்டாம்.இன்ஷா அல்லாஹ் நாம் பார்க்கும் மக்களிடம் சத்திய இஸ்லாத்தின்  செய்தியை எடுத்து சொல்வோம்.உலகின் ஒவ்வொரு நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இஸ்லாம் வெகு வேகமாய் பரவி வருகின்றது.(உதாரணம் சமீபத்திய நல்ல வரவு முன்னாள் பெரியார்தாசன்-இப்பொழு பேராசிரியர் அப்துல்லா)நம் பங்களிப்பு எப்போது?.இன்றே ஆரம்பிப்போம் அழைப்புபணியை இன்ஷா அல்லாஹ் .

என் எண்ணங்களை சொல்லவும்,செயல்படுத்தவும் ஞாபகமூட்டிய சகோ சுல்தான் அவர்களுக்கு என் நன்றிகள் பல.

நான் சுல்தான் என்ற பெயரில் பதிவை ஏற்படுத்தி சில இடுகைகளை இட்டிருக்கிறேன். அந்தப் பதிவிலிருந்த சில இஸ்லாமிய இடுகைகளை தனியே எடுத்து இந்த பதிவைத் தொடங்கினேன். இஸ்லாத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை நீக்குவதற்காக என்னால் இயன்ற முயற்சிதான் இப்பதிவு. தேவையுள்ளவர்கள் அவ்வப்போது வந்து படிக்கிறார்கள். யாரோ ஒரு நண்பர் இன்று லிங்க் கொடுத்ததால், இதைப் பார்வையிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்திற்கு, இந்த பதிவு பிடிக்கவில்லையென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே. என் இந்த பதிவை ஸ்பேம் என்று ரிப்போர்ட் செய்திருக்கின்றார்கள்.

அந்த நல்ல உள்ளங்களுக்கு ஏற்பட்ட வயிற்றெறிச்சலில்தான் நான் உறங்கிப் போனது தெரிந்தது. அவர்கள் வயிற்றெறிச்சலை வளர்க்க இனி அடிக்கடி இங்கேயும் எழுத முயற்சிப்பேன். டைஜின் போன்ற மாத்திரைகளை கொஞ்சம் தாராளமாக கைவசப்படுத்திக் கொள்ளுங்கள்.

என் நண்பர் ஒருவர் அவர் நண்பரோடு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே அறையில் வசித்து வந்தார். பின்னர் நம் நண்பரின் நண்பர் வாழ்வின் முன்னேற்றம் வேண்டி கனடா போய்ச் சேர்ந்தார். அங்கே போன ஓரிரு ஆண்டுகளில் அவர் இஸ்லாத்தை தம் வாழ்வியலாக ஏற்றார். சில மாதங்கள் கழித்து அவர் நம் நண்பருடன் போனில் பேசும் போது தாம் முஸ்லீமான விடயத்தையும் தெரியப் படுத்தினார்.

அப்போது நம் நண்பர், "ஏனப்பா இவ்வளவு ஆண்டுகள் என் கூட இருந்தாய். இவ்வாறு ஒரு நாட்டமுள்ளது எனக்கு தெரியவுமில்லை. நீர் சொல்லவுமில்லையே" எனக் கேட்டபோது, அவரோ, "நான் இவ்வளவு ஆண்டுகள் உன்னுடன் இருந்தும் நீ என்றாவது இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லி இருக்கிறாயா? நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம். சொல்ல வேண்டியது உனக்கு கடமையில்லையா? ஆனாலும் இறைவன் எனக்கு இப்போதுதான் நாடியிருக்கிறான் போலிருக்கிறது" என்று சொன்னாராம். அதைக் கேட்டதிலிருந்து என் நண்பர் பல நாட்கள் தவித்தது போலவே, நானும் சில நாட்கள் தவித்திருக்கிறேன்.

என்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்.

இறைவனின் நாட்டப்படி இனி தொய்வின்றி தொடத் தொடர முயற்சிப்பேன்.





thanks to

http://islamicfold.blogspot.com/

Monday, May 17, 2010

பேசித் தீர்க்கலாமே சகோதரி

 
இந்த செய்தியை தினமணியில் படித்தவுடன் மனம் துணுக்குற்றது.துக்கம் நெஞ்சை அடைத்தது.அந்த சகோதரி நம் ஊரை சேர்ந்தவர் என்பதாலோ,அந்த ஹட்சன் ஆறு பக்கத்தில் நான் வசிப்பதால் என்பதால் என்றோ இருக்கலாம்.ஆனால்  அந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது - இன்ஷா அல்லாஹ் இனி உலகின் எந்த பகுதியிலும் இது போல் நடக்கக் கூடாது என ஏக இறைவனை பிரார்த்தனை செய்தவளாக...........

உங்கள் பாத்திமா ஜொஹ்ரா 
----------------------------------------------------------------------------

கண​வர் மீது கொண்ட மன வருத்​தம் கார​ண​மாக 19 மாத பெண் குழந்​தையை நியூ​யார்க் நக​ரில் ஹட்​சன் ஆற்​றில் எறிந்​து​விட்டு தானும் அதில் குதித்து தற்​கொ​லைக்கு முயன்ற தமிழ்​நாட்​டுப் பெண் கைது செய்​யப்​பட்​டார்.​ 

அவர் மீதான குற்​றச்​சாட்​டு​கள் நிரூ​பிக்​கப்​பட்​டால் அவ​ருக்கு 25 ஆண்​டு​கள் தண்​டனை கிடைக்​கும்.​​ அமெ​ரிக்​கா​வில் கடந்த செவ்​வாய்க்​கி​ழமை இச் சம்​ப​வம் நடந்​தது.​ 

தமிழ்​நாட்​டைச் சேர்ந்த அவ​ரு​டைய பெயர் தேவி சில்​வியா.​ கண​வர் பெயர் டொமி​னிக் ஜேம்ஸ் பிரு​தி​வி​ராஜ்.​ ஆற்​றில் வீசப்​பட்ட 19 மாத பெண் குழந்​தை​யின் பெயர் ஜெஸ்​ஸிகா பிரு​தி​வி​ராஜ்.​​ அமெ​ரிக்​கா​வில் குடி​யேறி கடந்த சில ஆண்​டு​க​ளா​கி​றது.​ கண​வ​ரு​டைய வேலை கார​ண​மாக சிகாகோ,​​ கலி​போர்​னியா,​​ நியூ​யார்க் நக​ரங்​க​ளில் வசித்​தி​ருக்​கி​றார்.​ இரு​வ​ருக்​கும் இடை​யில் ஏதோ பூசல்.​ பேச்​சுத்​து​ணைக்கு கூட ஆள் இல்​லா​மல் தனி​மை​யில் சோகத்​தில் வாழ்ந்​தி​ருக்​கி​றார் தேவி சில்​வியா.​​ 

பனிக்​கட்​டி​யைப் போல ஜில்​லிட்ட ஆற்​றில் வீசி​ய​தால் குழந்​தை​யின் உடல் நீலம் பாரித்து,​மரக்​கட்​டை​யைப் போல விறைத்​தி​ருந்​தது.​ குழந்​தைக்கு வேறு ஏதும் பாதிப்பு ஏற்​பட்​டி​ருக்​குமா என்று தெரி​ய​வில்லை.​ அப்​படி ஏதும் நேரிட்​டால் தேவி சில்​வி​யா​வுக்கு தண்​டனை மேலும் அதி​க​ரிக்​கும்.​​ 

இச் சம்​ப​வம் குறித்து அவ​ரு​டைய ​ கண​வ​ரின் கருத்​தைக் கேட்க முற்​பட்​ட​போது அவர் பதில் அளிக்க வர​வே​யில்லை.​​ சில்​வியா இப்​போது மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெறு​கி​றார்.​ அவ​ருக்கு ஜாமீன் தரப்​ப​ட​வில்லை.

 நன்றி தினமணி

--------------------------------------------------------------------------------------
"(துக்கம் ஏற்பட்டால்) கன்னங்களில் அறைந்து கொள்பவன், அல்லது சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவன், அல்லது அறியாமைக் கால வழக்கப்படி புலம்புகிறவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).

நபிமொழி----------------------------------------------------------------------------------------------------------------------------------
    செல்வம் என்பது உலகப் பொருள்களின் அதிகரிப்பில் இல்லை. எனினும் செல்வம் என்பது மனத்தின் செல்வமேயாகும். போதுமென்ற மனமேயாகும் என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபிமொழி
----------------------------------------------------------------------------------------
4:128
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். 

குர்ஆன்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

Sunday, May 9, 2010

தண்ணீர் ....தண்ணீர்..........

என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், உடல் எடை ஓரளவுதான் குறையும்.

ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையில்லை, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடங்களையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி கடைசியில் வெளியேறி விடுகிறது.

இப்படி செய்வதால்தான் சிறுநீரகம் மற்றும் குடல் பிரச்சினைகள் என்று எதுவும் வராது. நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
இதுதான் பலரின் கேள்வி.

* ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவிகிதம் வரை தண்ணீர் தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது.

* பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

* ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.

* தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.

* வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை சாற்றைப் பிழிந்தோ குடிக்கலாம்.
குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது

பூமியின் மேற்பரப்பில் தண்ணீர்தான் மூன்று மடங்கு அடங்கியுள்ளது. அதே போல் மனித உடலும் முக்கால்வாசி தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது.

எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளிக்க வேண்டும்.

இதற்காகப் ஜில்'லென்று குளிர்ந்த தண்ணீர் நிரப்பிக் கொண்டு தொட்டிக்குள் உட்காருங்கள். ஒரு நிமிடம் தண்ணீருக்குள் முழு உடலும் இருக்கும் விதத்தில் மூழ்கிக் கொண்டு உடலை ஆங்காங்கே தேய்த்து விடவும்.

ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது.

-------------------------------------------------------------------
இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாடசிகள் இருக்கின்றன.13:4

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. 13:14


(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக "இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். இனனும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.18:29


(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).67:30

திருக்குர்ஆன் 
-------------------------------------------------------------------------------------
பாகம் 1, அத்தியாயம் 4, எண் 173 'ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நபி மொழி 

 
 





 

Tuesday, April 27, 2010

யுனிகோட் உமர் தம்பி காக்காவுக்கு அங்கீகாரம் தருமா கலைஞர் அரசு?

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?
 
thanks to 
 http://peacetrain1.blogspot.com/
 

Thursday, April 22, 2010

அதோட சேர்ந்து - இதுவும் அழிந்தது


அது நடந்தது  1912ம் வருடம் .மிக மிக ஆடம்பரம்,டாம்பீகம் மற்றும் என்ன என்ன இத்யாதிகள் இருக்கோ, அது எல்லாத்தையும் சேர்த்து ஒரு மிக பிரம்பாண்டமான கப்பல் கட்டினான் லார்ட் பிர்ரி என்பவன்.

 நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து,என்னென்ன தொழில் நுட்பம் உண்டோ அது எல்லாத்தையும் கொண்டு உருவாகிய அது தன் பயணத்தை (முதலும் கடைசியுமான) இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகரம் நோக்கி தொடர ஆரம்பித்தது.

அதன் கொள்ளளவு சுமார் 2200 பயணிகள்.எல்லாரும் கூத்தும் கொண்டாட்டமும் குடியுமாக பயணம் தொடர்ந்து கொண்டிருக்க,
பயணமான நான்கே நாட்கள்,இரண்டாக பிளந்து - கடலில் மூழ்கியது.அதுதான் டைடானிக் கப்பல்.இதைப் பற்றி நாம் பல மீடியாக்கள் மூலம் அறிந்திருப்போம்.ஆனால் செய்தி அதுவல்ல.


அந்தக் கப்பல் தன் பயணத்தைத் தொடருமுன்,லார்ட் பிர்ரி பத்திரிக்கையாளர்களை கூட்டினான்.அந்த கப்பலின் பிரம்மாண்டம் பற்றி விவரித்தான்.ஒரு பத்திரிக்கையாளன் கேட்ட கேள்விக்கு,அவன் சொன்னான் ஒரு ஆணவமான-திமிரான பதில்.அதுதான் இங்கு செய்தி.
"இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.அந்த அளவுக்கு உறுதியாக,பல்வேறு தொழில் நுட்பம் கொண்டு கட்டியுள்ளோம்"என்றான்.

அந்தி திமிர்,ஆணவம்,இறுமாப்பு,நான்கே நாட்களில் கப்பலோடு புதையுண்டு போனது.

இது நேற்று நடந்த வரலாறு.
பல ஆண்டுகள் முன்பு   நடந்த வரலாறுகள் பல.
இப்ராஹீம் நபியை ஏற்காது,ஏக இறைவனை ஏற்காது ஆணவம் கொண்ட நம்ரூது,ஹாமான்,
மூஸா நபியை,ஏக இறைவனை மறுத்த பிறவுன்(பாரோ)இன்னும் பல அத்தாட்சிகள் நிறைந்து காணப்படுகின்றன குர் ஆனில்.எச்சரிக்கை கொள்வோம்,ஆணவம் தவிர்ப்போம்.  
************************************************

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்
அண்ணல் நபி அவர்கள் அருளினார்கள்: “எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது.” இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார்: “மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?” அண்ணலார் அவர்கள் நவின்றார்கள்: “(இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.” (முஸ்லிம்)


அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி)
அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். ” (அபூதாவூத்)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்
அண்ணல் நபி
அவர்கள் கூறுகின்றார்கள்: “நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது.” (புகாரி)

Monday, April 12, 2010

பண்படுத்தும் சிந்தனை

கட்டுரை போட்டு நாளாச்சி.நெறைய ப்ராஜக்ட் வேலை,பிளாக் பக்கம் திரும்பவே முடியல.சரி என்ன உருப்படியா எழுதலாம் என்று யோசிச்சாலும் ஒன்னும் ஓடல.அதுக்கு காரணமும் இருக்கு.சமீபத்துல நடந்த ஒரு விபத்து.மனச விட்டு அகலவே இல்ல.மரணம் எப்போவும்,எங்கேயும் வரும் தப்பிக்கவே முடியாது.அதுக்கு முன்னாடி நல்ல செயலகள் செய்யனும்,இல்லன்ன பெரிய பிரச்சனைதான்.

இப்போ ஒரு ஞாபகம் வருது.ஒரு பேட்டியில (முன்னாள் பெரியார்தாசன்)இப்போ பேராசிரியர் அப்துல்லா சொன்னார்,கடவுள் இல்லன்னா,பிரச்சனையே இல்ல,நெறைய பேருக்கு கடவுள் இல்லன்னு பிரச்சாரம் பண்ணியிருக்கேன்,அவங்களுக்கும் பிரச்சனையே இல்ல.ஆனா ஒருக்கால் கடவுள் என்று ஒருவன் இருந்துட்டா?அப்போ என் கதி என்னாகிறது?அந்த சிந்தனையே என்னை உழுக்கி எடுத்துவிட்டது.பிறகு எல்லா மத புத்தகங்களையும் ஆராய்ச்சி பண்ணி,எதிலேயும் முழு திருப்தி இல்லாம,குர்ஆனில் தேடினேன்.எனக்குள் இருந்த எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்தது.இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு ஆதாரம் கிடைத்தது.இஸ்லாத்தை ஏற்றேன்."

அந்த விபத்து,
ஏழு வருடம் கழித்து லண்டனில் இருந்து வரும் தன் மருமகனை அழைத்து செல்வதற்காக குடும்பத்தோடு சென்னை ஏர்போர்ட் சென்றது ஒரு குடும்பம்,மாமனார் கனடா சிட்டிசன்,அவரும்,அவர் மனைவி,அவர் மகள்,பேரன்கள் என எல்லாருமாக சென்றார்கள்.
மருமகனை பல வருடங்கள் கழித்து சந்தித்த ஆனந்தம் அவருக்கு,உள்ளம் குதூகலம் கண்டது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு.எல்லாரும் சென்னையிலிருந்து கிளம்பினார்கள்.அதிகாலை நேரம் - அவர்களின் கார் திருத்துறைப்பூண்டி அருகே வரும்போது,டிரைவர் சிறிது கண் அசர,எதிரே நின்றிருந்த லாரியின் மேல் கார் மோத,உடனடியாகவே மருமகன்,மாமனார் இருவரும் பலியாயினர்.மற்ற அனைவருக்கும் பலத்த காயம்,இது அந்த குடும்பத்துக்கும் மட்டுமல்ல - அந்த ஊரையே கதிகலங்க வைத்துவிட்டது.

எல்லாம் வல்ல இறைவன் அந்த இருவருக்கும் மிக உயர்ந்த பதவிகளை நல்குவானாக,அந்த குடும்பத்துக்கு பொறுமையையும்,உறுதியையும் தருவானாக்.நம்மை காப்பானாக.

எந்த ரூபத்திலும் மரணம் வருமுன்,நாம் உணர்ந்து கொள்வோம் ஏக இறைவனை-நம்பிக்கை கொள்வோம் அவனிடத்தில் என்ற செய்தியை சொல்லி,இன்ஷா அல்லாஹ் மீண்டும் சிந்திப்போம் மற்ற விஷயங்களுடன்.

Saturday, March 27, 2010

அண்ணல் நபிகளின் அமுத மொழிகள்: "மனைவி"

   ''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள்.  

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்  நூல்: முஸ்லிம் 2911

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி அவர்கள் கூறினார்கள்.  

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்  (ரலீ)  நூல்: புகாரீ 5200

 ''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள்.  

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிநூல்: திர்மதி 1082

  ''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.  

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலிநூல்: புகாரி 56

    ''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீநூல்: முஸ்லிம் 2915

 

Thursday, March 18, 2010

யாரு அந்த பத்து பேரு..............

என் அன்பு அக்கா தேனம்மை லக்ஷ்மணன் என்னையும் அழைத்திருந்தார்கள்,பத்து பெண்களை தேர்ந்தெடுங்கள் என்று,அவர்களின் என் மீதான நம்பிக்கைக்கும்,அன்புக்கும் முதலில் நன்றி சொல்லி.............
இதோ என்னால் முடிந்த அளவுக்கு............


1)ஏசுவின் தாய் மேரி

தந்தை இன்றி பிள்ளை பெற்றதனால்,அக்கால மக்கள் மேரி அவர்களை அவதூறு சொன்னபோது-ஏக இறைவனுக்காக அதை சகித்துக்கொண்ட மேன்மை மிகு தாய்.

இஸ்லாத்தில் ஏசுவை-ஈசா நபி(இறைவனின் தூதர்)என்றும் மேரியை மர்யம் என்றும் அழைக்கிறோம்.மேலும்,அவர்கள் மிக நல்ஒழுக்கமுள்ள சிறந்த பெண்மணி என்பதையும் ஏற்கிறோம்.

 2)கதிஜா ரலி அவர்கள்

தம் நாற்பது வயதில் தன் கணவரை (நபிகள் நாயகம் ஸல்)இறைவன் தன் தூதராக (இஸ்லாம்)தேர்வு செய்து-அகிலத்தாருக்கு குரானையும் வழங்கி,மக்களுக்கு நற்போதனை செய்யுமாறு சொன்னவுடன்,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவ்வாறு போதனை செய்யவே,அம்மக்கள் அவர்களுக்கு பல்வேறு துன்பங்கள் கொடுத்தபோது,தம் கணவருடன் கூட இருந்து -எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த அந்த உத்தமி.

3) இந்திரா காந்தி

துணிச்சல் மிகு பெண்(ஆண்களே கொண்டுவராத எமேஜென்சியை கொண்டுவந்தவர்)

4)மேடம் கியூரி

இயற்பியல் ஆராய்ச்சி

5)மேதா பட்கர்

சேவகி

6)கமலா சுரையா

எழுத்தாளர்

7)சரோஜினி நாயுடு

கவிக்குயில் 

8)டாகடர் முத்துலட்சுமி

பெண்கள் முன்னேற்றம்

9)பிரதீபா பாட்டில்

அரசு நிர்வாகம் 

10)லத்திகா சரண்

சட்டம் ஒழுங்கு

அக்கா,என்னால முடிஞ்சது அவ்வளவே,இனி நீங்கதான் சொல்லணும். 

Sunday, March 14, 2010

பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்.

கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாகயிருந்தவர். தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டவர்.

தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

தனது பெயரை அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக் கொண்டார். இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக் குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது: "இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக் கொண்டுள்ளது. நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச் செய்தேன். அதில் இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல. குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது. நான் நாத்திகக் கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன். இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்." என்றார்.

டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார். பின்னர் மதீனாவும் செல்வார். அல்லாஹ் அவருடைய நல்லச் செயல்களை பொருந்திக் கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம்.

நன்றி அரப் நியூஸ், மார்ச் 12, 2010