அவளுக்கு பிடிக்கணுமே என்று கவலையா இருந்தது.அவளும் வந்தாச்சி.வந்ததுமே என்னை கட்டி அணைத்துக்கொண்டவள்,சொன்னால்,"துலுக்க வீட்டு சாப்பாடு ஒரு வெட்டு வெட்ட வேண்டியதுதான்."
"வா வந்து உட்கார்.நானும் ஆசையாசையா காய்கறி பிரியாணியை தட்டுல போட்ட வுடனே கேட்டாள்,'என்ன இது எங்க ஆத்து சமையல் மாதிரி பண்ணியிருக்கே,துல்லுக்க வீட்டுல சாப்பாடுன்னா ஆட்டுக்கறி,கோழிக்கறி கிடைக்கும்னு நினச்சு வந்தேன்" என்றாலே பார்க்கலாம்.
கேட்டேன்,ஏன் அப்பிடின்னு,அதுக்கு சொன்னாள்,ஒரே காய்கறி தின்னு தின்னு சலிச்சு போச்சு,கறி,கோழின்னு வீட்டுக்கு தெரியாம ஹோட்டல் போய் ஒரு வெட்டு வெட்டி அந்த டேஸ்ட்டு புடிச்சிபோய்......."
"சாரி சொல்லிக்கொண்டேன்,அடுத்த வாரம் ஆட்டு பிரியாணி செஞ்சுட்டா போச்சு "என்று சொன்னதை அன்பாக பார்த்தால்.அதோடு இன்னும் சொன்னேன்,"பாய்மாருங்க குடும்பத்துல ஒரே கறி சாப்பாடுத்தான்னு தப்பா நினைச்சுக்காதே,இறைவன் எதுவெல்லாம் சாப்பிட அனுமதி கொடுத்துள்ளானோ அதையெல்லாம் சாப்பிடுவோம்,எதையெல்லாம் வேண்டாமெண்டு சொல்லியுல்லானோ அதை நாங்க சாப்பிடமாட்டோம்.
அது போல நீ துலுக்க என்ற பயன்படுத்துற அந்த சொல் முஸ்லிம்களைக் குறிக்காது.அது துருக்கி நாட்டையே குறிக்கும்.முன்னால முஸ்லிம்களின் கிலாபா என்ற தலைமை துருக்கியில இருந்ததால எல்லா முஸ்லிம்களையும் துருக்கர் என்று அழைக்கலாயினர்,(இந்தியாவில் மட்டும்)அது தவறு."என்றேன் அன்பாக.
'சாரி "சொன்னாள்.
அடுத்த வாரம் சிந்திப்போம் என்று விடை பெற்றுக்கொண்டோம்.
நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதொ அதுவுமேயாகும் ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
திருக்குர்ஆன் 16:115

