Friday, December 24, 2010

ஆறுகள் ஓடுமா அரேபியாவில்?


Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.
''அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?'' . எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது- ''ஆம் பனியுகத்தில் அவ்வாறு இருந்தது''.
அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:''எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா.?''
ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-
''ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!''
ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது: ''எப்படி சொல்கிறீர்கள்?''
''புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை''
''இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அறிவித்து விட்டதை அறிவீர்களாஸ?
ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:
அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும்ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது. (நூல்: முஸ்லிம்) 
இப்போது சொல்லுங்கள்: ''நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?
பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: ''ரோமானியர்களாக இருக்கலாம்''
''நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் எப்படி கூற முடிந்தது.?''
உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:
''அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.''
மேலும் அவர் சொன்னவை:
''ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.
அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.''
Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்த பார்வையினால் கிடைத்த நிஜம் இது.
''நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?'' (அல் குர்-ஆன்: 41:53)

Sunday, December 5, 2010

விவரிக்க முடியல.


    
அமெரிக்காவுல இப்போ சீசன் நேரங்கிரதால புதுசு புதுசா- தினுசு  தினுசா பொருள்களெல்லாம் சீனாவுலேர்ந்து வந்து குவியத் தொடங்கியாச்சு.நாளுக்கு ஒரு தினுசு.பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. அப்போ குழந்தைங்களுக்கு??.என் பிள்ளைங்களும் ரொம்ப ரசிச்சு பாக்குறாங்க.

அப்படித்தான் ஈத் பெருநாளைக்கி புது டிரஸ் எல்லாம் எடுத்தாச்சி.குழந்தைதனமா எதுனா சிக்குதான்னு ஒரே தேடல்.நமக்கு பிடிச்சிருக்குதேன்னு வாங்கினா ஒருக்கா புள்ளைங்களுக்கு பிடிக்காம போய்டுமே.அப்போ என்ன செய்றது?


புள்ளைங்களையும் பெரிய மால்கள்,ஷாபிங் சென்டர்கள்,வணிக வளாகங்கள் இப்பிடி எல்லா எடத்துலயும் போய்  காட்டினேன்.புது புது டாயஸ் கண்ணைக் கவர்ந்தாலும்,பிள்ளைங்களுக்கு படிச்சது சின்ன ஹெலிகாப்டர்களும்,பொம்மை தலையணையும் தான்.

அந்த ரெண்டும்தான் எங்களுக்கும்,பிள்ளைங்களுக்கும் பிடிச்சது.

புடிச்சது வாங்கறதும், புள்ளைங்க ரசிக்கிறதும் அதை பார்த்து நாம சந்தோஷப்படறதும் சுபுஹானல்லாஹ் என்னால விவரிக்க முடியல.


17:70நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.
திருக்குர்ஆன் .





Monday, November 29, 2010

பாட்டியின் பார்டி (GRANDMA'S PARTY)

கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும். 

மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். 

சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது.

உணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது. இஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. வயிற்று வலி நிற்கும். 

ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் செ‌ய்து கொடு‌க்கலா‌ம். இ‌ஞ்‌சி துவைய‌ல் சா‌ப்‌பி‌ட்டா‌ல் வாய் கசப்பு போய், நா‌க்கு‌க்கு சுவை ‌கிடை‌க்கு‌ம்.

Monday, November 15, 2010

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

          
அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்


Friday, November 12, 2010

அழிவைத் தரும் 7 பாவங்கள் எவை?

1.அல்லாஹ்விற்கு இணை வைப்பது.
2.சூனியம் செய்வது.
3.அல்லாஹ் எந்த உயிரைக் கொலை செய்வதைத் தடுத்து இருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றி கொலைசெய்வது.
4.வட்டியை உண்பது.
5.அநாதைகளின் சொத்துக்களை அபகரிப்பது.
6. போர் நடந்துக்கொண்டிருக்கும் தினத்தன்று புறமுதுகு காட்டுதல்.
7.விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.

Sunday, November 7, 2010

குரங்கு சேட்டை

ஒரு குரங்கு ஒரு ராஜாளிப் பறவையின் கூட்டிலிருந்த ஒரு முட்டையை எடுத்து ஒரு கோழி இட்டிருந்த முட்டைகளுடன் சேர்த்து வைத்து விட்டது.வித்தியாசம்காணத் தெரியாத கோழியும் தன முட்டைகளுடன் சேர்த்து அதையும் அடை காத்து குஞ்சு பொரித்தது.ராஜாளிக் குஞ்சும் கோழிக் குஞ்சிகளுடன் அக் கோழியின் அரவணைப்பில் இருந்து வந்தது.அதனுடைய செயல்,நடவடிக்கை அனைத்தும் கோழிக் குஞ்சிகளுடையதைப் போலவே இருந்தது.

சிறிது வளர்ந்த நிலையில் அது ஒரு நாள் வானத்தை அண்ணாந்து பார்த்த போது,ராஜாளிப் பறவைகள் கூட்டாகப் பறந்து செல்வதைக் கவனித்தது.அப்போது அது வருத்தத்துடன்,''இறைவா,என்னையும் இது போல் ராஜாளியாகப் படைத்திருக்கக் கூடாதா?நானும் அவை போல ஆனந்தமாகப் பறப்பேனே!''என்று வருத்தப்பட்டது.
என்ன விசித்திரம்!ராஜாளிக் குஞ்சுக்குத் தான் ஒரு ராஜாளி என்பதே தெரியவில்லை.
இது போல் தான் நம்மில் பலரும் தன்னைப் பற்றி,ஏக இறைவன் தந்த திறமையை பற்றி அறிவதில்லை.தன்னுள் தேவையான திறமை இருந்தும் அது இல்லையே என்று அடுத்தவரைப் பார்த்து புலம்புபவர் பலர்.நாம் ஒரு ராஜாளி தான் என்பதை உணர வேண்டும்.


இளைஞனே உன் கூடு பூமியில் இல்லை 
மலை உச்சியில்
நீ ராஜாளி பறவை 
பற இன்னும் பற 
மேலே இன்னும் உச்சிக்கு 
தொடு
சிகரத்தை 
இன்ஷா அல்லாஹ்*  
உன்னால் முடியும். 

சாரே ஜகான் சே அச்சா எழுதிய கவிஞர் இக்பால் 

*இறைவன் நாடினால்



Saturday, November 6, 2010

வெல்கம் ஒபாமா

  

பதவியேற்பு
ஜனவரி 202009



பதவியில்
பதவியேற்பு
ஜனவரி 42005

இலினொய் மாநில மேலவைஉறுப்பினர்
13வது மாவட்டத்தில் இருந்து
பதவியில்
ஜனவரி 81997 – நவம்பர் 42004




பிறப்புஆகஸ்ட் 4 1961 வயது  49)
ஹொனலுலுஹவாய், ஐக்கிய அமெரிக்கா
வாழ்க்கைத்
துணை
மிசெல் ஒபாமா (தி. 1992)
பிள்ளைகள்மலியா ஆன் (பி. 1998), சாஷா (பி. 2001)
இருப்பிடம்கென்வூட்ஐக்கிய அமெரிக்கா
பழைய மாணவர்கொலம்பியா பல்கலைக்கழகம்,
ஹார்வர்ட் சட்டக் கல்லூரி
துறைசட்டத்தரணி
அரசியல்வாதி


Tuesday, November 2, 2010

சாப்பாடு போடாத மகன்...

பொள்ளாச்சி பெத்தநாயக்கனூரை சேர்ந்தவர் கோபால் (50). இவர், மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக கோவையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். மனு கொடுக்க காத்திருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக 108 இலவச ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விரைந்துவந்து முதியவரை, வேனில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் கலெக்டரிடம் கொடுக்க வைத்திருந்த மனுவில், எனக்கு 10 ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லை. 

என்னிடம் இருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை எனது மகன் பறித்துக்கொண்டு சாப்பாடு போடவில்லை. பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக மருமகள் மூலம் மிரட்டுகிறான். என்னிடம் இருந்து அவன் பறித்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும். வாழும் காலம் வரை சாப்பாடு போட உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
 செய்தி 


“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.6:151


 மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.46:15


திருக்குர்ஆன் 




  

Wednesday, October 27, 2010

படித்தேன்,பகிர்ந்தேன். உத்தி

”ஹலோ …. யாரு?”
“அஸ்ஸலாமு அலைக்கும் ரபீக்தானே? சுல்தானோட மகன் ரபீக்?
‘’ஆமா …. நீங்க?’’
‘’நான் தான் கம்பம்ல் இருந்து காதர் மாமா பேசறேன். சின்னப் புள்ளைல பார்த்தது. சொகமா இருக்கீயா?
  ‘’ஐயோ காதர் மாமா… ! எங்கப்பாவோட பெஸ்ட் பிரண்ட். சொல்லுங்க மாமா. எப்படியிருக்கீங்க? என்ன விசேஷம்?’’
  ‘’நல்லார்க்கேன் …. அப்புறம் நஜீபுன்னு ஒரு பையன் இருக்கானாமே, தேனிக்காரப் பையன். உங்கூடப் படிச்சவண்டு சொன்னாங்க. அவன் எப்படி நல்ல பையனா? சும்மா ஒரு காரியமாத்தேன் கேக்கறேன்.’’
  ‘’சூப்பர் பையன் மாமா. முன்பெல்லாம் அழகா இருப்பான்…’’
  ’’ஏன் இப்ப அழகா இல்லயா?’’
  ‘’இப்பக் கொஞ்சம் குடிக்கப் பழகி ஆளு நோஞ்சானாகிப் போனான். இருந்தாலும் விவரமான பையன் மாமா. ரொம்பக் கெட்டிக்காரன்.’’
  ‘’அப்படியா என்ன தொழில் செய்யறான்?’’
  ‘’தற்சமயம் ஒண்ணுமில்லை மாமா. அவுங்கப்பா அவன நம்பமாட்டேங்கிறார். ஒரு தரம் ரெண்டு லட்சத்தை தொலைச்சுட்டான்றதுக்காக பெத்த புள்ளைய வாழ்க்கை பூரா நம்பாட்டி எப்படி மாமா… அது சரி எதுக்கு அவனப் பத்திக் கேக்குறீங்க மாமா?’’
  ‘’சும்மா ஒரு கல்யாண ஆலோசனை. என்னுடைய ஒரு நண்பர் விசாரிக்கச் சொன்னார்.”
  ‘’தைரியமா பெண் கொடுக்கச் சொல்லுங்க மாமா. கடை வச்சுக் கொடுத்தா எப்படியும் பொழச்சுக்கிறுவான்.’’
  ‘’ப்ச்… அவன விடு… வேறே ஒரு பையன் இருக்கானாமே நாசர் –ன்னு சின்னமனூர்க்காரன். அவனத் தெரியுமா?’’
 ‘’நல்லாத் தெரியும். நஜீப விட தங்கமான பையன் மாமா.’’
 ‘’அவன் என்ன செய்யறானாம்?’’
 ‘’ஸ்டேசனரிக் கடை வைத்திருந்தான்.’’
 ’’வைத்திருந்தானா? இப்ப இல்லையா?’’
‘’ஆமா மாமா. ஃபிரண்டுங்க கூட சேர்ந்து சீட்டு விளையாண்டு ஒரே ராத்திரில எழுபத்தைந்தாயிரம் ரூபாய் தோத்துட்டான். அந்த விரக்தில குடி கொஞ்சம் ஓவராயிடுச்சு. மத்தபடி எந்தக் கம்பளைண்டுமில்லங்க மாமா. பொண்ணுக் கொடுக்கிறதாயிருந்தா ரெண்டு பையன்கள்ல யாருக்கு வேணும்னாலும் தைரியமா கொடுக்கச் சொல்லுங்க மாமா. நான் கூட ராத்திரி பூரா அவனுங்க கூடத்தான் இருந்தேன். சுபுஹுக்கு முன்னாடிதான் வந்து படுத்தேன். லுஹர் நேரம் போன் பண்ணி எழுப்பிட்டீங்க. அவனுங்க ரெண்டு பேருமே என்னோட உயிர் நண்பனுங்க. யாரையுமே நான் குறைச்சு சொல்ல மாட்டேன். சரிதானே மாமா?’’
  ‘’ரொம்ப சரிங்க மருமகனே. உன்னச் சின்னப் பிள்ளைல பார்த்தது. உங்கப்பாவை நல்லாத் தெரியும். நீ உங்கப்பனுக்கு அப்பனா இருக்கிறீயே. நான் அவனுங்களைப் பற்றி விசாரிக்குறதுக்காக போன் பண்ணலை. உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கிறத்தான் கூப்பிட்டேன். அல்லாஹ் காப்பாத்தினான். வச்சிரட்டா.’’  
நன்றி : சமரசம் : ஆகஸ்ட் 1-15,2010 

Wednesday, October 20, 2010

எனக்கு கிடைத்த சைனீஸ் விருந்து

நான் வேலை செய்யும் இடத்தின் அருகே ஒரு பெரிய ஷாப்பிங் காம்பள்க்ஸ் உள்ளது.அங்கு பல விதமான கடைகள்.அங்கு ஒரு சைனீஸ் ஹெர்பல் கடையும் இருக்கிறது.அங்குள்ள ஒரு சைனீஸ் பெண் எனக்குப் பழக்கம்.பிரேக் நேரத்தில் போய்  பேசிக் கொண்டிருப்பேன்.ஆங்கிலமும்,சைனீசும் கலந்த பேச்சு.அந்த கடையின் மனமும் மிக அருமையாக இருக்கும்.எல்லா வகையான வேர்கள்,தாவரங்கள்,இலைகள் இன்னும் பெயர் தெரியாத வகைகள்...............

ஒருநாள்,அந்த பெண் சொன்னால்.நாளைக்கு உங்களுக்கு விருந்து தரப் போகிறேன் என்று?நானும் சரி ஆனால் சிலவற்றை நான் சாப்பிடமாட்டேனே?(உள்ளுக்குள் பயங்கர பயம் வேறு)பாம்பு,தவளை,கரப்பான் என அடுக்கி இருந்தால் என்ன செய்வது?(இவற்றையெல்லாம் சைனீஸ் சூப்பர் மார்கெட்டில் பார்த்து,வியர்த்திருக்கிறேன்)என்று சொன்னேன்."என்ன சாப்பிட மாட்டீர்கள் என்று சொல்லுங்கள்"என்றால்.நானும் சொன்னேன்,பன்றி,பாம்பு,தவளை,இறைவன் பெயர் சொல்லி அறுக்காத - பிராணிகள்(உண்ண அனுமதிக்கப்பட்ட ஆடு,மாடு,கோழி போன்ற)என்று."சரி,நாளை வாருங்கள் லஞ்சுக்கு என்றால்.தலையாட்டிவிட்டு,சென்றுவிட்டேன்.

கணவரிடம் சொன்னேன்.உணவு தர அழைப்பு தந்த அந்த சகோதரியின் அழைப்பை ஏற்றுக்கொள்.உனக்கு பிடிக்காத - மார்க்கம் அனுமதிக்காத உணவு இருந்தா எடுத்து சொல்.புரிந்து கொள்வாள்.என்றார்.

மறுநாள்,மதியம் சென்றேன்.அப்போதுதான் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்.பக்கத்தில் இன்னொரு சைனீஸ் பெண்,ஆனால் அந்த பெண் என்னைப்போல் ஹிஜாபோடு.என்னைக்கண்டதும் சலாம் (முஸ்லிம் முகமன்)சொன்னால்.பதில் சொன்னேன்.மூவரும் அமர்ந்தோம்.

ஆவலாக அந்தப்பெண்களையும்,உணவையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.உணவு பரிமாறப்பட்டது.ஒவ்வொரு உணவின் தட்டு பக்கத்திலும் ஒரு குறிப்பு,ஆங்கிலத்தில்.பொறித்த கோழி-ஹலால்,மாடு வறுவல்-ஹலால்,பிரியாணி சோறு ஹலால்,(சைனீஸ் ஸ்டைல்-(கூடுதலாக பிரியானில் சேமியா சேர்க்கப்பட்டிருந்தது)சைனீஸ் டி.இன்னும் சாலட் வகைகள்.எனக்கு ஆச்சரியம்,

"என் தோழி இவள் மூன்று மாதம் முன்பு இஸ்லாத்தை தழுவினால்.அன்றிலிருந்து இறைவனால் அனுமதிக்கப்பட (ஹலால்)உணவு மட்டுமே சாப்பிடுகிறாள்.நீயும் இந்த மார்க்கம்தான் என்பதை அறிந்து,என் தோழியையும் அறிமுகப்படுத்தி - விருந்து தர வேண்டும் என விரும்பினேன்,அதுதான் இந்த ஏற்பாடு"அந்த சைனீஸ் பெண் சொன்னால்.எனக்கு வயிறும் நிறைந்து, மனமும் நிறைந்தது.கண்கள் பணிக்க - இறைவனுக்கு நன்றி சொல்லி விடை பெற்றேன்.ரொம்ப அற்புதமான அனுபவம்.மாஷா அல்லாஹ்.